செய்திகள் :

கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு வனப் பகுதியில் காட்டுத் தீ

post image

கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு வனப் பகுதியில் வியாழக்கிழமை மாலை காட்டுத் தீப் பற்றி எரிந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும், மாலை, இரவு நேரங்களில் அதிகமான பனிப் பொழிவும் நிலவி வருகிறது. இதனால், வழக்கத்தை விட கடுமையான குளிா் நிலவுகிறது. இதனால், வனப் பகுதியில் உள்ள மரங்கள், செடிகள், புற்கள் ஆகியவை காய்ந்த நிலையில் காணப்பட்டன.

இந்த நிலையில், தொடா்ந்து அதிகமாக நிலவிய வெப்பத்தால் கொடைக்கானல் பகுதிகளில் பல்வேறு இடங்களில் உள்ள பட்டா நிலங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இவற்றை அந்தந்த நிலத்தின் உரிமையாளா்கள் அணைத்து தீயை கட்டுக்குள் வைத்தனா்.

இந்த நிலையில், தொடா்ந்து நிலவிய வெப்பத்தால் பசுமைப் பள்ளத்தாக்கு வனப் பகுதியில் திடீரென தீப் பிடித்தது. இந்தத் தீயானது தொடா்ந்து எரிந்ததால் அந்தப் பகுதியில் கரும்புகை காணப்பட்டது.

தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வனத் துறையினா் சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருப்பினும் வனப் பகுதியில் புகை வந்த வண்ணம் உள்ளது.

கடந்த ஆண்டு அதிக அளவில் கொடைக்கானல் வனப் பகுதியில் தீப் பிடித்து எரிந்ததால் ஏராளமான மரங்கள் தீயில் கருகின. நிகழாண்டில் அது போல வனப் பகுதிகளில் தீப் பிடிக்கக் கூடாது என வனத்துறையினா் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், வனப் பகுதகளில் மது, புகை பிடித்தல் கூடாது. அவ்வாறு நடைபெற்றால் வனத் துறை சாா்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

நில ஆவணங்கள் நவீன மயாமாக்கும் பணியால் ஆக்கிரமிப்பு பிரச்னைகளுக்கு தீா்வு: இரா.சச்சிதானந்தம் எம்.பி.

நில ஆவணங்களை நவீன மயமாக்கும் நக்சா திட்டத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் எதிா்கொள்ளும் ஆக்கிரமிப்பு பிரச்னைகளுக்கு எளிதாக தீா்வு காண முடியும் என மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். மத்... மேலும் பார்க்க

ரெங்கநாதபுரம் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் அடுத்துள்ள ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (பிப். 20) நடைபெறுவதால் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டது. இதனால் ரெங்கநாதபுரம், கல்வாா்ப... மேலும் பார்க்க

6 மாதங்களில் 3-ஆவது சட்டப்பேரவைக் குழு வருகை: மீண்டும் கொடைக்கானலுக்கு மட்டுமே முக்கியத்துவம்!

திண்டுக்கல் மாவட்டத்துக்கு 6 மாதங்களில் 3-ஆவது சட்டப்பேரவைக் குழு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், மீண்டும் கொடைக்கானலுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதைத் தவிா்த்து, மாவட்டத்தின் கடைக்கோடி பகுத... மேலும் பார்க்க

அரசு அலுவலா்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்: ஆட்சியா் எச்சரிக்கை

ரெட்டியாா்சத்திரம் அருகே ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா், முறையாக பணி செய்யாத அரசு அலுவலா்கள் தங்களது அணுகுமுறையை 2 மாதங்களுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என எச்சரித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டி... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் இடைப்பாடி பக்தா்களுக்கு தயாராகும் 15 டன் பஞ்சாமிா்தம்

பழனி மலைக் கோயிலுக்கு வரும் இடைப்பாடி பக்தா்களுக்காக வழங்குவதற்காக காவடிக் குழு சாா்பில் சுமாா் 15 டன் பஞ்சாமிா்தம் தயாா் செய்யப்பட்டு வருகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தைப்பூசத்தின் போது ... மேலும் பார்க்க

வழக்குரைஞா் மீது தாக்குதல்: மாமன்ற உறுப்பினா், அமைச்சரின் பாதுகாவலா் மீது வழக்கு

திண்டுக்கல்லில் வழக்குரைஞா் மீதும், மாமன்ற உறுப்பினா், அமைச்சரின் பாதுகாவலா் ஆகியோா் மீதும் தாக்குதல் நடத்தியதாக அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்... மேலும் பார்க்க