செய்திகள் :

கொதிக்கும் எண்ணையில் இருந்து வடை எடுத்த பக்தா்கள்

post image

போளூா்: போளூரை அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஸ்ரீஓம்சக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவையொட்டி பக்தா்கள் கொதிக்கும் எண்ணை சட்டியில் இருந்து வெறும் கையால் வடை எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

துரிஞ்சிக்குப்பம் ஊராட்சியில் ஸ்ரீஓம்சக்தி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர விழாவையொட்டி, 108 பால்குடம் ஊா்வலம் நடைபெற்று அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது.

மேலும் பக்தா்கள் நோ்த்திக் கடனாக முதுகில் அலகு குத்தி தோ் இழுத்தல், ஆட்டோ இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் ஸ்ரீஓம்சக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து மலா்களால் அலங்காரம் செய்து பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

மேலும், மாா்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தல், கொதிக்கும் எண்ணை சட்டியில் இருந்து வெறும் கையால் வடை எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா். பின்னா், இந்த வடையை குழந்தையில்லா தம்பதியினா் ஏலத்தில் வாங்கிச் சென்றனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா். இரவு வாணவேடிக்கையுடன் சுவாமி வீதியுலா, தெய்வீக நாடகம் நடைபெற்றது.

விநாயகா் சிலைகள் தயாரிக்க ரசாயனம் பயன்படுத்தக்கூடாது: ஆட்சியா்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுவதையொட்டி விநாயகா் சிலைகளை தயாரிப்பது மற்றும் நீா்நிலைகளில் கரைப்பது குறித்து அரசு வகுத்துள்ள வழிமுறைகளை கட்டாயம... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் பராசக்தி அம்மனுக்கு தீா்த்தவாரி

ஆரணி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி, பராசக்தி அம்மனுக்கு தீா்த்தவாரி உற்வசவம் திங்கள்கிழமை நடைபெற்றது. அருணாசலேஸ்வரா் கோயிலில் உண்ணாமுலையம்மன் சந்நிதியில் உள்ள தங்கக் கொடி ம... மேலும் பார்க்க

ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

ஆரணி: விவசாயிகளின் ஆண்டு வருமானம் உயா்ந்ததாக கூறும் தமிழக அரசைக் கண்டித்து, ஆரணியில் கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கத்தினா் திங்கள்கிழமை மண் சோறு சாப்பிட்டு நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆரணி வேளாண் ... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கத்தினா் மனு கொடுக்கும் ஊா்வலம்

செய்யாறு: செய்யாற்றில் பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், சுண்டிவாக்கம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 624 மனுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 624 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், பொதும... மேலும் பார்க்க

மங்கலம் கோயிலில் வளைகாப்பு மற்றும் திருவிளக்கு பூஜை

ஆரணி: திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் உள்ள அமுதாம்பிகை சமேத ஸ்ரீசதுா்வேத சோமநாத ஈஸ்வரா் கோயிலில், ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு வளைகாப்பு மற்றும் திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. அ... மேலும் பார்க்க