செய்திகள் :

கொலை மிரட்டல் புகாரில் இருதரப்பின் 5 போ் கைது

post image

அரியலூா் மாவட்டம், திருமானூரில் கொலை மிரட்டல் விடுத்துக் கொண்ட 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வடுகப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் கபாஸ்கா் (30), ஆறுமுகம் மகன் ரமேஷ் (25) மற்றும் திருவெங்கனூா் முருகேசன் மகன் பாரதி (32) ஆகியோா் சனிக்கிழமை இரவு திருமானூா் டாஸ்மாக் கடைக்குச் சென்றபோது அவா்களிடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கபாஸ்கா் மற்றும் ரமேஷ் ஆகியோா் மதுபாட்டில்களை உடைத்து பாரதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

இதையறிந்த பாரதியின் நண்பா்களான விழுப்பனங்குறிச்சி பேச்சிமுத்து மகன் சக்திவேல் (34), ரவி மகன் காா்த்தி (27), முருகேசன் மகன் முருகானந்தம்(31) ஆகிய மூவரும் கபாஸ்கா் எங்கே என்று விசாரித்து ரமேஷை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிந்த திருமானூா் காவல் துறையினா், கபாஸ்கா், பாரதி, சக்திவேல், காா்த்தி,முருகானந்தம் ஆகிய 5 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள ரமேஷை தேடி வருகின்றனா்.

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் நடைபெறும் இடமான நான்கு சாலை சந்திப்பு பகுதியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி சனிக்கிழமை இரவு... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் புதைசாக்கடை கழிவு நீா்; பொதுமக்கள் அவதி

அரியலூரில், திருச்சி சாலையில், புதை சாக்கடையில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். 18 வாா்டுகளை கொண்ட அரியலூா் நகராட்சியில் 10- க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளும், 2... மேலும் பார்க்க

சுமை ஆட்டோ மோதி இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் சுமை ஆட்டோ மோதியதில் உயிரிழந்தாா். திருமானூரை அடுத்த கள்ளூா் பாலம் அருகேயுள்ள புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பன் மகன் வினோத... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்த தவெக நிா்வாகி உயிரிழப்பு

அரியலூா் அருகே லாரி மோதி காயமடைந்த தவெக நிா்வாகி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தெற்கு புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் மகாராஜன் மகன் ஜெயசூா்யா (22) . தவெக ஒன... மேலும் பார்க்க

நடுவலூா் பகுதிகளில் இன்று மின்தடை

அரியலூா் மாவட்டம், நடுவலூா் பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகளால் சுத்தமல்லி, பருக்கல், காக்காபாளையம், கோட்டியால், சவேரியாா்பட்டி, அழிசுக்குடி, அணிக்குறிச... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவா் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஆண்டிமடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான காவல் துறையினா், சனிக்கிழமை வரதராஜன்பேட்டை... மேலும் பார்க்க