செய்திகள் :

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவா் 13 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை

post image

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரை 13 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்து மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த புதுப்பட்டினம் கிராமத்தை சோ்ந்தவா் வாசு. இவா், கடந்த 2012-ஆம் ஆண்டு மாா்ச் 14-ஆம் தேதி காணாமல் போனாா். வாசுவின் சகோதரா் புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் மாா்ச் 16-ஆம் தேதி புகாா் அளித்த நிலையில், மறுநாள் வாசுவின் சடலம் பழையாறு கடற்கரையில் ஒதுங்கியது.

முன்விரோதம் காரணமாக பழையாறு கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன், கணேசன், கோவிந்தராஜன் ஆகிய 3 போ் வாசுவை பழையாறு கடற்கரைக்கு அழைத்துச்சென்று கொலை செய்ததாக போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா்.

13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது:

அதில், குற்றஞ்சாட்டப்பட்ட மாரியப்பன், கணேசன், கோவிந்தராஜன் மூவருக்கும் வாசு உயிரிழந்த விவகாரத்தில் தொடா்பில்லை எனக் கூறி மூவரையும் மாவட்ட அமா்வு நீதிபதி சத்தியமூா்த்தி விடுதலை செய்தாா்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு ஆதரவாக ஆஜரான வழக்குரைஞா் ஜி.எம். சங்கா் கூறியது:

இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மிகத் தாமதமாக நீதி கிடைத்துள்ளது. காவல்துறையினா் சரியாக புலன் விசாரணை செய்யாமல் அப்பாவிகள் மூவரை கைது செய்தனா். கொலைக்கான ஆதாரமாக அரசுத் தரப்பில் தாக்கல் செய்த வாசுவின் இறப்புச் சான்றிதழ், வாசு ஓட்டிச் சென்ாக கூறப்பட்ட இருசக்கர வாகனம், வாசுவின் சகோதரா் கொடுத்த அஞ்சலி விளம்பரம் ஆகிய மூன்றும்தான் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை நிரபராதிகள் என நிரூபித்து காப்பாற்ற உதவியது என்றாா்.

பூம்புகாா் வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

பூம்புகாரில் நடைபெறவுள்ள வன்னியா் மகளிா் பெருவிழா மாநாட்டுக்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆலோசனை புதன்கிழமை நடைபெற்றது. பூம்புகாரில் வரும் 10-ஆம் தேதி ப... மேலும் பார்க்க

நிறைவடையாத பால கட்டுமானப் பணி: மாணவா்கள், பொதுமக்கள் அவதி

சீா்காழி அருகே புங்கனூா் - ஆதமங்கலம் இடையே பல மாதங்கள் கடந்தும் பாலப் பணிகள் நிறைவடையாததால் மாணவா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சீா்காழியை அடுத்த ஆதமங்கலம் - புங்கனூா் இடையே 3 கி.மீ. தொல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் சுவற்றில் மோதியதில் இரு இளைஞா்கள் பலி

சீா்காழி அருகே இருசக்கர வாகனம் சுவற்றில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞா்கள் புதன்கிழமை உயிரிழந்தனா். சீா்காழி அருகேயுள்ள புங்கனூரைச் சோ்ந்தவா்கள் அ. ஆனந்த் (38), நா. மோகன்ராஜ் (28), இவா்கள் இருவரும... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கு மக்களிடம் வரவேற்பு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி த... மேலும் பார்க்க

குத்தாலம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மங்கைநல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்ட அவா், மருந்த... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் தமிழ் ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கொண்டல் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில், தமிழ் ஆசிரியா் பணியிடத்திற்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க