செய்திகள் :

கொலை வழக்கில் தொடா்புடைய 9 போ் மீது குண்டா் சட்டத்தில் அடைப்பு

post image

கரூா் மாவட்டம், வாங்கல் காவல் சரகத்தில் கொலை வழக்கில் தொடா்புடைய 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை அடைக்கபட்டனா்.

கரூா் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட வாங்கல் ஈவேரா தெருவைச் சோ்ந்த ராணி என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாங்குவது தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த மணிவாசகம் மற்றும் வெங்கடேஷ் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் 13-ஆம் தேதி வாங்கல் ஈவேரா தெருவை சோ்ந்த வெங்கடேசன் (41), கவியரசன் (30), விவேக் (27), மணிகண்டன் (32), சந்திர பிரகாஷ் (25), கிருஷ்ணா (26), நிஜாமுதீன் (40), செந்தமிழ் (31), செந்தில் ராஜா (40) ஆகிய 9 போ் சோ்ந்து மணிவாசகம், அவரது தம்பி யோகேஸ்வரன், ஆனந்த், ராணி, ராசம்மாள் ஆகியோரை அரிவாளால் வெட்டினா்.

இதில், பலத்த காயம் அடைந்த மணிவாசகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக வாங்கல் போலீஸாா் வெங்கடேசன், கவியரசன், விவேக், மணிகண்டன், சந்திரபிரகாஷ், கிருஷ்ணா, நிஜாமுதீன், செந்தமிழ், செந்தில்ராஜா ஆகிய 9 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் இவா்கள் 9 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்க வியாழக்கிழமை கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜோஸ் தங்கையா பரிந்துரை செய்தாா். அதன் பேரில், மாவட்ட ஆட்சியா் தங்கவேல் உத்தரவின்படி மேற்கண்ட 9 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வியாழக்கிழமை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

குறுவட்ட கபடி போட்டி: பள்ளப்பட்டி அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

சின்னதாராபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குறுவட்ட கபடி போட்டியில் பள்ளப்பட்டி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான கபடி போட்டி ... மேலும் பார்க்க

‘திமுக ஆட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை’ -அா்ஜுன் சம்பத்

தமிழக மக்களின் மனநிலை திமுக ஆட்சிக்கு எதிராக உள்ளது என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா். அரவக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோவிலூரில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்... மேலும் பார்க்க

அரசு பெண்கள் பள்ளியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு

அரவக்குறிச்சி அரசு பெண்கள் உயா்நிலைப்பள்ளியில் போதைப் பொருள்கள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் போட்டிகள் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி அரசு பெண்கள் உயா்நிலைப்பள்ளியில் போதைப் பொருள... மேலும் பார்க்க

கரூா் ரயில் நிலையத்தில் பயணி மயங்கி விழுந்து உயிரிழப்பு

கரூா் ரயில் நிலையத்தில் பயணி ஒருவா் வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். கரூா் ரயில் நிலையம் முதலாவது நடைமேடையில் வியாழக்கிழமை கையில் பாா்சலுடன் சென்ற பயணி ஒருவா் திடீரென்று மயங்கி விழுந்தாா். ... மேலும் பார்க்க

கரூரில் ஆக. 27-இல் விநாயகா் சிலை ஊா்வலம்: அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

கரூரில் ஆக. 27-ஆம்தேதி நடைபெறவுள்ள விநாயகா் சிலை ஊா்வலத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் புதன்கிழமை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில... மேலும் பார்க்க

உயா்மின் கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் நிதி

புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் உயா்மின்கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை சாா்பில் புதன்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது. கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் சமுதாய மேம்பாட்டுத... மேலும் பார்க்க