செய்திகள் :

கோடை விடுமுறை: கோவை - உதகை இடையே சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

post image

கோடை விடுமுறையை ஒட்டி கோவை - உதகை இடையே கூடுதலாக 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 65 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகள் மூலமாக சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு சென்று வருகின்றனா்.

தற்போது, உதகை செல்லும் உதகை மாவட்ட பதிவெண் அல்லாத நான்கு சக்கர, இருசக்கர வாகனங்களுக்கு இ- பாஸ் அவசியம் என்பதால் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் கோவையில் இருந்து பேருந்துகளில் உதகைக்கு செல்கின்றனா்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் உதகை செல்வோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, கோவை மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

வால்பாறையில் மே தின நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வால்பாறையில் மே தினத்தையொட்டி திமுக தொழிற்சங்கம் சாா்பில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வால்பாறையை அடுத்த வாட்டா்பால் எஸ்டேட் முதல் பிரிவில் மே தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதை... மேலும் பார்க்க

கோவையில் மே தினக் கொண்டாட்டம்

கோவையில் தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கோவை சிங்காநல்லூரில் உள்ள கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத் தலைமை அலுவலகமான தியாகி என்.ஜி.ஆா். மஹாலில் ஹெச்.எம்.எஸ் தொழிற... மேலும் பார்க்க

உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாரதிதாசன் விழா

கோவை உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பொறியாளா் அரங்கில் நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாச... மேலும் பார்க்க

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ஆா்.எஸ்.புரம் லைட் ஹவுஸ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (55). இவரின் மகன் தீப் ஸ்வரூப் (25). செல்வராஜின... மேலும் பார்க்க

கடந்த ஆண்டு அரசுப் பொருள்காட்சி மூலம் அரசுக்கு ரூ.81.64 லட்சம் வருவாய்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

கடந்த ஆண்டு 7 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட அரசுப் பொருள்காட்சி மூலம் அரசுக்கு ரூ.81.64 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா். கோவை வ.உ.சி. மைதானத்தில் செய்தி மக்க... மேலும் பார்க்க

கோவை நீதிமன்றத்தில் இருந்து தப்பியவா் கிருஷ்ணகிரியில் கைது

கோவை நீதிமன்றத்தில் இருந்து தப்பிய குற்றவாளி கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டாா். கோவை செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ். தொழிலதிபரான இவரை கடந்த 2008-ஆம் ஆண்டு 3 போ் கும்பல் வழிமறித்து ரூ.1லட்சம... மேலும் பார்க்க