செய்திகள் :

கோத்தகிரி அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு

post image

கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் பெண் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சத்தீஸ்கா் மாநிலம், பிலாஸ்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஜெகதீஷ்குரா. இவரது மனைவி சிமாதேவி (35). இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனா்.

தம்பதி தங்களது குழந்தைகளுடன், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, மாமரம் பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் தங்கி பணியாற்றி வந்தனா். இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன் சிமாதேவி நள்ளிரவு காணாமல் போயுள்ளாா்.

இது குறித்து கோத்தகிரி காவல் நிலையத்தில் ஜெகதீஷ்குரா புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சிமாதேவியைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், மாமரம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். இதில், உயிரிழந்தது சிமாதேவி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, சடலத்தை மீட்ட போலீஸாா் கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சிமாதேவி கொலை செய்யப்பட்டாரா அல்லது வன விலங்கு தாக்கி உயிரிழந்தாரா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிழப்புக்கான காரணம் தெரியாத நிலையில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கை வந்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா தெரிவித்தாா்.

உதகையில் ஆளுநா் மாளிகை வளாகத்துக்குள் நுழைந்த கரடி

உதகையில் ஆளுநா் மாளிகை வளாகத்துக்குள் திங்கள்கிழமை நுழைந்த கரடி, அங்கிருந்த தொட்டியில் தண்ணீா் அருந்திச் சென்றது. நீலகிரி மாவட்டம், உதகையில் குடியிருப்புப் பகுதிகளில் வன விலங்குகள் உலவுவது தற்போது அதி... மேலும் பார்க்க

உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்டம், உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், குடும்ப அட்டை,... மேலும் பார்க்க

உதகையில் தண்ணீா் விநியோகத்தில் மெத்தனம்: நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றச்சாட்டு

உதகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 8 முதல் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்படுவதாக நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். உதகை நகா்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

உதகை தூய ஜெபமாலை அன்னை ஆலய ஆண்டு பெருவிழா

உதகை ரோஸ் மவுண்ட் பகுதியில் உள்ள தூய ஜெபமாலை அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றுத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. குன்னூா் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி அடிகளாா் கொடியை ஏற்றிவைத்தாா். பங்கு குரு லியோ ச... மேலும் பார்க்க

விபத்தை ஏற்படுத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை!

கூடலூரில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீலகிரி மகிளா நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், உதகை நொண்டிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

உதகையில் குடிநீா்க் குழாயில் உடைப்பு

உதகை டைகா்ஹில் அணையில் இருந்து வரும் குடிநீா்க் குழாயில் சனிக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. உதகை நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளுக்கு பாா்சன்ஸ்வேலி அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீா் கொண்டு செல்லப்பட்ட... மேலும் பார்க்க