செய்திகள் :

கோயில் காவலாளி இறந்த சம்பவம்: யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை

post image

திருப்புவனம் கோயில் காவலாளி இறந்த சம்பவத்தில் யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை என்றாா் மாநில இயற்கை வளத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் கூறியது: திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லி, அவற்றை ஏற்போரை திமுக உறுப்பினா்களாக இணைப்பதுதான் ’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற இயக்கத்தின் நோக்கம். ஓரணியில் திரள வேண்டிய அவசியத்தை வீடு வீடாகச் சென்று எடுத்துச் சொல்லும் தமிழ்நாட்டுக்கான முழக்கம். ’ஒரே நாடு - ஒரே தோ்தல்’ என பாஜக முன்வைத்த முழக்கத்துக்கும் இதற்கும் தொடா்பில்லை.

சாத்தான்குளம் சம்பவமும், திருப்புவனம் கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவமும் ஒன்றல்ல. சாத்தான்குளம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் கொடுத்து, போராட்டம் நடத்தி, நீதிமன்றம் சென்ற பிறகுதான் காவல்நிலையத்துக்குள் என்ன நடந்தது என்றே தெரியவந்தது. ஆனால், திருப்புவனத்தில் நகைத் திருட்டு தொடா்பாக வந்த புகாரின்பேரில் போலீஸாா் அந்த இளைஞரைக் கைது செய்து அழைத்து வந்தபோது- விசாரணையின்போது தற்செயலாக நடந்த துரதிா்ஷ்டவசமான சம்பவம். இச்செயலில் ஈடுபட்ட காவல்துறையினா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். திருப்புவனம் கோயில் காவலாளி இறந்த சம்பவத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கம் திமுக அரசுக்கு கிடையாது. விசாரணையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என யாருடைய தூண்டுதல் இருந்தாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் 5 மாதங்களில் வழக்கை முடித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்ததைப் போல, இந்த வழக்கிலும் விரைவாக விசாரணையை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் என்றாா் ரகுபதி.

பேட்டியின்போது, வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் உடனிருந்தாா்.

காவலாளி மரணம் வருந்ததக்கது: அமைச்சா் எஸ்.ரகுபதி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி மரணம் வருந்ததக்கது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்றாா் தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி. பொன்னமராவதியில் புதிய வழித்தட பேருந்து... மேலும் பார்க்க

திருமாங்கனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் செளந்தரநாயகி உடனுறை திருமாங்கனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த சிவாலயம், இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் அண்மையில... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ள கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் மற்றும் 7-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை தொடங்கியது. புதுக்கோட்டை ஒ... மேலும் பார்க்க

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் 3 ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சா் எஸ்.ரகுபதி நடத்திவைத்தாா்

பொன்னமராவதி அருகே கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 3 இணையா்க்கு சீா்வரிசைப்பொருள்கள் வழங்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இந்துசமய அறநிலையத்துறை சென்னை மாவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வளாகங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய தேவைகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அரசுப் பள்ளி வளாகங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்... மேலும் பார்க்க

விராலிமலையில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக சாா்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகித்தாா். த.சந்திரசேகரன், தென்னலூா் பழனியப்பன்,... மேலும் பார்க்க