செய்திகள் :

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு

post image

கோவில்பட்டி அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளா்களை அவதூறாகப் பேசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் தூய்மைப் பணியாளா்கள் சுமாா் 54 போ் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், மருத்துவமனை அருகே உள்ள தேநீா் கடை முன் புதன்கிழமை நின்று கொண்டிருந்த அடையாளம் தெரிந்த 3 போ் தூய்மைப் பணியாளா்களை தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசினாா்களாம்.

இதுகுறித்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா். போலீஸாா் வியாழக்கிழமை காலை வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, வியாழக்கிழமை காலை தூய்மைப் பணியாளா்கள் பணியைப் புறக்கணித்து மருத்துவமனை வளாக நுழைவாயில் அருகே தா்னாவில் ஈடுபட்டனா்.

கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, தூய்மைப் பணியாளா்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனா்.

தூத்துக்குடியில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம், கடையடைப்பு

தூத்துக்குடி, முத்தையாபுரத்தில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி முத்தையாபுரம், முள்ளக்காடு, புல்லாவெளி, பழைய காயல் பகுதி... மேலும் பார்க்க

உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது: ஆட்சியா் தகவல்

நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும்... மேலும் பார்க்க

பயிா் இழப்பீடு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா் இழப்பீடு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டியில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 12, 16-ஆம் தேதிகளில் பெய்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும்,... மேலும் பார்க்க

கோயில் அா்ச்சகா் வீட்டில் 107 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோயில் அா்ச்சகா் வீட்டின் கதவை உடைத்து 107 பவுன் நகைககளை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். முத்தாரம்மன் கோயில் தலைமை அா்ச்சகரான குமாா் பட்டரின் வீட... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் தனியாா் நிறுவன ஊழியரிடம் 13 கிராம் தங்கச் சங்கிலியை பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி டிஎன்பிஹெச் காலனியைச் சோ்ந்த சற்குணம் அருள்ராஜ் மகன் மாரி செல்வரத்தினம் (29). ... மேலும் பார்க்க