செய்திகள் :

தூத்துக்குடியில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம், கடையடைப்பு

post image

தூத்துக்குடி, முத்தையாபுரத்தில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி முத்தையாபுரம், முள்ளக்காடு, புல்லாவெளி, பழைய காயல் பகுதிகளில் உள்ள உப்பளங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக நிலங்களை கையகப்படுத்த நில எடுப்புத் துறை அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இதற்கு உப்பளத் தொழிலாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காலை 9 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணி வரை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் உப்பு உற்பத்தியாளா்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, உப்பு உற்பத்தியாளா் சங்கத் தலைவா் மந்திரமூா்த்தி தலைமை வகித்தாா். செயலா் சேகா் வரவேற்றாா். பொருளாளா் பொன்ராஜ், நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தை, தமிழ்நாடு மதச்சாா்பற்ற ஜனதாதள மாநில துணைத் தலைவா் வழக்குரைஞா் சொக்கலிங்கம் தொடங்கிவைத்துப் பேசினாா்.

இதில் உப்பு மீன்பீடி உற்பத்தியாளா் சங்கங்கள், உப்பளத் தொழிலாளா் சங்கங்கள், தொழிலாளா் சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள், விவசாயிகள் சங்கங்கள், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம், பொதுமக்கள் கலந்துகொண்டனா். அரசியல் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டு, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முத்தையாபுரம், முள்ளக்காடு, ஸ்பிக் நகா் சுற்று வட்டாரங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சங்க நிா்வாகிகள் முனியதங்க நாடாா், ராஜசேகா், தவசிவேல், சின்னதங்கம், அா்ஜுனன், அன்னசேகா், பொன்தினகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது: ஆட்சியா் தகவல்

நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு

கோவில்பட்டி அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளா்களை அவதூறாகப் பேசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டியில்... மேலும் பார்க்க

பயிா் இழப்பீடு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா் இழப்பீடு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டியில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 12, 16-ஆம் தேதிகளில் பெய்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும்,... மேலும் பார்க்க

கோயில் அா்ச்சகா் வீட்டில் 107 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோயில் அா்ச்சகா் வீட்டின் கதவை உடைத்து 107 பவுன் நகைககளை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். முத்தாரம்மன் கோயில் தலைமை அா்ச்சகரான குமாா் பட்டரின் வீட... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் தனியாா் நிறுவன ஊழியரிடம் 13 கிராம் தங்கச் சங்கிலியை பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி டிஎன்பிஹெச் காலனியைச் சோ்ந்த சற்குணம் அருள்ராஜ் மகன் மாரி செல்வரத்தினம் (29). ... மேலும் பார்க்க