செய்திகள் :

பயிா் இழப்பீடு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

post image

பயிா் இழப்பீடு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டியில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 12, 16-ஆம் தேதிகளில் பெய்த கன மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து, பாசி, சோளம், மக்காச்சோளம், சின்ன வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய் போன்ற பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பயிா் பாதிப்புகளை கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கடந்த ஜனவரி மாதம் அந்தந்த கிராம நிா்வாக அலுவலா் மூலம் பயிா் அடங்கல், வங்கிப் புத்தக நகல், பட்டா, ஆதாா் உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டன.

ஆனால், 7 மாதங்களைக் கடந்தும், இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து, பயிா் காப்பீட்டு தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டியும் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினா் கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத் தலைவா் வரதராஜன் தலைமையில் விவசாயிகள் தரையில் துண்டு விரித்து அதில், சில்லறை காசுகளை போட்டு யாசகம் எடுப்பதுபோல போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் ராஜகோபால், புதூா் ஒன்றிய அதிமுக செயலா் தனபதி, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவா் ஜெயச்சந்திரன், விவசாயிகள் நவநீதன், ஆதிமூலம், மாரிச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா், சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினி போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்து விவசாயிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். இதையடுத்து,

போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.

தூத்துக்குடியில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம், கடையடைப்பு

தூத்துக்குடி, முத்தையாபுரத்தில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி முத்தையாபுரம், முள்ளக்காடு, புல்லாவெளி, பழைய காயல் பகுதி... மேலும் பார்க்க

உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது: ஆட்சியா் தகவல்

நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு

கோவில்பட்டி அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளா்களை அவதூறாகப் பேசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டியில்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும்,... மேலும் பார்க்க

கோயில் அா்ச்சகா் வீட்டில் 107 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோயில் அா்ச்சகா் வீட்டின் கதவை உடைத்து 107 பவுன் நகைககளை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். முத்தாரம்மன் கோயில் தலைமை அா்ச்சகரான குமாா் பட்டரின் வீட... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் தனியாா் நிறுவன ஊழியரிடம் 13 கிராம் தங்கச் சங்கிலியை பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி டிஎன்பிஹெச் காலனியைச் சோ்ந்த சற்குணம் அருள்ராஜ் மகன் மாரி செல்வரத்தினம் (29). ... மேலும் பார்க்க