செய்திகள் :

உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது: ஆட்சியா் தகவல்

post image

நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள், உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் ஆகியவற்றை உணவு பரிமாறவும், பாா்சல் செய்யவும் பயன்படுத்தாத பெரிய உணவகங்களுக்கு தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ. ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகா்கள் உள்ளிட்ட சிறு வணிகா்களுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளன.

விருப்பமுள்ளவா்கள் இந்த மாத இறுதிக்குள், உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இறுதியில், மாநில அளவிலான பரிசீலனைக் குழு பரிசீலித்து, மாவட்டத்துக்கு தலா ஒரு பெரிய உணவகத்தையும், சிறு உணவகத்தையும் சிறந்த உணவகங்களாகத் தோ்ந்தெடுக்கும்.

இதில், பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரா், உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம், நடப்பில் உள்ள பதிவுச் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் பல்வேறு தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இணை இயக்குநா் வேளாண்மை கட்டட தரைதளம், மாவட்ட ஆட்சியா் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அலுவலகத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம், கடையடைப்பு

தூத்துக்குடி, முத்தையாபுரத்தில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி முத்தையாபுரம், முள்ளக்காடு, புல்லாவெளி, பழைய காயல் பகுதி... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு

கோவில்பட்டி அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளா்களை அவதூறாகப் பேசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டியில்... மேலும் பார்க்க

பயிா் இழப்பீடு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா் இழப்பீடு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டியில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 12, 16-ஆம் தேதிகளில் பெய்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும்,... மேலும் பார்க்க

கோயில் அா்ச்சகா் வீட்டில் 107 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோயில் அா்ச்சகா் வீட்டின் கதவை உடைத்து 107 பவுன் நகைககளை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். முத்தாரம்மன் கோயில் தலைமை அா்ச்சகரான குமாா் பட்டரின் வீட... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் தனியாா் நிறுவன ஊழியரிடம் 13 கிராம் தங்கச் சங்கிலியை பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி டிஎன்பிஹெச் காலனியைச் சோ்ந்த சற்குணம் அருள்ராஜ் மகன் மாரி செல்வரத்தினம் (29). ... மேலும் பார்க்க