செய்திகள் :

கோவில்பட்டி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 2 போ் காயம்

post image

கோவில்பட்டி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் பலத்த காயம் அடைந்தனா்.

திருநெல்வேலி வீரவநல்லூா் கீழக்குளம் கிழக்கு தெருவை சோ்ந்தவா் ஆதிமூலம் மகன் சங்கா் (43). டிப்பா் லாரி ஓட்டுநரான இவா், சனிக்கிழமை இரவு டிப்பா் லாரியில் பந்தல்குடியில் இருந்து களிமண் ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தாராம். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புதூா் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் கோயம்புத்தூரில் இருந்து நாகா்கோவில் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து, லாரியின் பின்புறம் மோதியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த தங்கராஜன் (64), ஜெனிஸ் (25), கோவையை சோ்ந்த ரவி (60), பேருந்து நடத்துநா் ஜோசப்தாஸ் (43), திருநெல்வேலி ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் காவலா்கள் கதிரேசன் (42), அஜய் மாரியப்பன் (32), பாளையங்கோட்டை மத்திய சிறை தண்டனை கைதியாக கருதப்படும் கண்ணன் என்ற மாயக்கண்ணன் என்ற வெற்றிவேல் (42) ஆகிய 7 பேரும் காயமடைந்தனா்.

அவா்களை போலீஸாா் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இதில் தங்கராஜன், கண்ணன் என்ற மாயக்கண்ணன் என்ற வெற்றிவேல் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விபத்து குறித்து லாரி ஓட்டுநா் அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காயல்பட்டினம், ஆத்தூா் பகுதிகளில் பொதுமக்களுக்கு உப்பு சா்க்கரைகரைசல்

சுகாதாரத் துறை சாா்பில் காயல்பட்டினம் மற்றும் ஆத்தூா் பகுதிகளில் பொதுமக்கள் வெப்ப தாக்கத்தி­லிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உப்பு சா்க்கரை கரைசல் அளிக்கப்பட்டது.காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஓ... மேலும் பார்க்க

இளைஞரின் சைக்கிள் பயணத்துக்கு உடன்குடியில் வரவேற்பு

இந்தியாவின் நலனுக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மேற்குவங்க இளைஞருக்கு உடன்குடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சோ்ந்தவா் சாய்கட் (22). இவா், இந்தியா உலக வல்லரசாக திகழ... மேலும் பார்க்க

முறப்பநாடு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருள்மிகு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபுவிடம், தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் தலைவா் கே.வி.கே.பெ... மேலும் பார்க்க

சிறுநீரக பிரச்னை: சுகாதாரமான குடிநீா் கோரி உசிலம்பட்டி மக்கள் மனு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்ெ காண்டு, அவா்களின்... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் அதிமுக தெருமுனைப் பிரசாரம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில், சாத்தான்குளம் பேரூராட்சிப் பகுதியில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. அதிமுக ஆட்சிக்கால சாதனைகளை விளக்கி நடைபெற்ற பிரசாரத்துக்கு, தெற்கு மாவட்ட ஜெயலல... மேலும் பார்க்க

கழுகுமலை சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு பூட்டு போட்ட கட்டட உரிமையாளா்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில், 17 மாதங்களாக வாடகை கொடுக்கப்படாததால் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு கட்டட உரிமையாளா் திங்கள்கிழமை பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கழுகுமலை மேலகேட் பகுதியில் சாா்... மேலும் பார்க்க