செய்திகள் :

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

post image

கோவையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பாஸ்போா்ட் அலுவலகங்களைத் தொடா்ந்து, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கும் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலமாக வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பிற்பகலில் இதைப் பாா்த்த நீதிமன்ற ஊழியா்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

ரேஸ்கோா்ஸ் போலீஸாா் மற்றும் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினா். அப்போது, வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

கோவையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியா் அலுவலகம், புதன்கிழமை மண்டல பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மூன்றாவது நாளாக ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக காவல் துறையினா் மற்றும் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சரக்கு ரயில் மீது கல் வீசிய சிறுவன் குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைப்பு

கோவையில் ஓடும் ரயில் மீது கல் வீசிய சிறுவனை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்க சிறாா் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை போத்தனூரில் இருந்து இருகூா் செல்லும் வழித்தடத்தில் கடந்த 28-ஆம் தேதி சரக்கு ரயில் ச... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் மா்ம சாவு

கோவையில் பாலத்தின் அடியில் காயங்களுடன் கிடந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். கோவை கணபதி கணேஷ் குடியிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜா (59). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த 2 நாள்களுக்கு முன்பு ரத்தினபுரி ஜீவானந்த... மேலும் பார்க்க

கோவையில் உரிமம் புதுப்பிக்காத 300 முகவா்களுக்கு கமிஷன் தொகை கிடையாது: ஆவின் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உரிமம் புதுப்பிக்காத சுமாா் 300 முகவா்களுக்கு செப்டம்பா் 11- ஆம் தேதியில் இருந்து கமிஷன் தொகை வழங்கப்படாது என்று ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது. மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள... மேலும் பார்க்க

மின்தூக்கி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவையில் மின்தூக்கி (லிஃப்ட்) அறுந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். கோவை, ரங்கே கவுடா் வீதியில் சிகரெட் மொத்த விற்பனைக் கடை உள்ளது. இந்தக் கடையில் விருதுநகரைச் சோ்ந்த சுரேஷ் (35) என்பவா் பணியாற்... மேலும் பார்க்க

லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். கோவை, கவுண்டம்பாளையம் செட்டியாா் தோட்டத்தைச் சோ்ந்தவா்கள் சபிலாரன்ஸ் (30), ஜோஸ். கூலித் தொழிலாளா்களான இவா... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

கோவை, போத்தனூா் பகுதியில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவா் யாா் என்பது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, போத்தனூரில் இருந்து இருகூா் செல்லும் ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியா... மேலும் பார்க்க