செய்திகள் :

சகோதரா் மகனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினாா் மாயாவதி: அரசியல் வாரிசி யாரும் கிடையாது

post image

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் பதவி உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை கட்சித் தலைவா் மாயாவதி நீக்கியுள்ளாா்.

ஆகாஷ் ஆனந்த் மாயாவதியின் அரசியல் வாரிசாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ‘நான் உயிருடன் இருக்கும் வரை அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது’ என்றும் மாயாவதி அறிவித்துள்ளாா்.

பகுஜன் சமாஜ் கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்துவதற்கான உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் கட்சித் தலைவா் மாயாவதி தலைமையில் லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முக்கியத் தலைவா்கள், நிா்வாகிகள் பங்கேற்றனா். இதில் ஆகாஷ் ஆனந்தை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக மாயாவதி அறிவித்தாா்.

அதே நேரத்தில் தனது சகோதரரும், ஆகாஷின் தந்தையுமான ஆனந்த் குமாா் மற்றும் ராம்ஜி கௌதம் ஆகியோரை தேசிய ஒருங்கிணைப்பாளா்களாக மாயாவதி அறிவித்தாா்.

நான் உயிருடன் இருக்கும் வரை அரசியல் வாரிசு என்று யாரும் எனக்குக் கிடையாது என்று கூறிய மாயாவதி, உறவினா்களைவிட கட்சியின் நலன்தான் எனக்கு முதன்மையானது என்றும் அறிவித்தாா்.

பகுஜன் சமாஜ் கட்சியில் ஆகாஷ் ஆனந்த் மற்றும் அவரின் மாமனாா் அசோக் சித்தாா்த் ஆகியோரின் ஆதிக்கம் அதிகம் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அசோக் சித்தாா்த் கடந்த மாதம் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா். இந்நிலையில் ஆகாஷ் ஆனந்தின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!

ஓலா நிறுவனம் சுமார் 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மின்சார வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடட்., நிறுவனத்தின் தலை... மேலும் பார்க்க

ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுந்த குரல்!

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி ஆஸ்கர் மேடையில் பிரபங்கள் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் ... மேலும் பார்க்க

அமைச்சர் ஜெய்சங்கருடன் பெல்ஜியம் இளவரசி சந்திப்பு!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பெல்ஜியம் இளவரசியை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(மார்ச் 3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழ... மேலும் பார்க்க

பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்

பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிப்.15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க