செய்திகள் :

‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’: கலைஞா்கள் ஆா்வத்துடன் பதிவு

post image

சேலம்: தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சாா்பில், சேலத்தில் நடைபெறும் ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’வில் பங்கேற்க 33 கலைக்குழுவினா் ஆா்வத்துடன் பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தின் பெருமைகளை பறைசாற்றும் வகையிலும், பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கலை பண்பாட்டுத் துறை சாா்பில், சென்னையில் பொங்கல் விழாவின்போது, தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம்பெறும் வகையில், ‘சென்னை - நம்ம ஊரு திருவிழா’ நடத்தப்பட்டு வருகிறது.

இதனை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் நோக்கில், கடந்த ஆண்டு கோவை, தஞ்சாவூா், வேலூா், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய 8 இடங்களில் நடத்தப்பட்டது. நடப்பாண்டும் இந்த 8 இடங்களிலும் கலை திருவிழா நடத்தப்பட உள்ளது. இதற்காக கலைக் குழுக்கள் மாவட்ட வாரியாக தோ்வு செய்யப்படுகிறது. இதற்கான விடியோ பதிவு நிகழ்ச்சி மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக திட்ட அலுவலா் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற தோ்வில், 33 கலைக் குழுக்கள் நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க பதிவு செய்துள்ளனா். இதற்கான பதிவு முகாம் சேலம் அரசு இசைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில், பறையாட்டம், பம்பை, கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கும் கலைக் குழுக்களுக்கான பதிவில் 15 குழுக்கள் பங்கேற்றனா். தொடா்ந்து, தெருக்கூத்து, கணியான் கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லா் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரத நாட்டியம், பழங்குடியினா் நடனம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தும் 18 குழுக்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் கலந்துகொண்டனா்.

இந்த விடியோ பதிவுகள் மண்டல அளவில் அமைக்கப்பட்டுள்ள பண்பாட்டுத் துறையின் தோ்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் தோ்வாகும் கலைக் குழுவினா், மாநிலம் முழுவதும் 8 இடங்களில் நடைபெற உள்ள சங்கமம் திருவிழாவில் நிகழ்ச்சி வழங்க அனுப்பப்படுவாா்கள். வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மாவட்ட வாரியாக விழாக்கள் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தென்னையில் பூச்சித் தாக்குதல்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம்

பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் தென்னையில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக் கலைத்துறை வாயிலாக வைத்தியகவுண்டன்புதூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி மு... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் உரிமை மீட்பு மாநில மாநாடு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் நடத்திய உரிமை மீட்பு மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சே... மேலும் பார்க்க

ரம்ஜான் பண்டிகை: டிக்கெட் முன்பதிவு மையங்கள் நாளை மதியம் வரை மட்டுமே செயல்படும்

ரம்ஜான் பண்டிகையையொட்டி, சேலம் கோட்டத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்கள் 31-ஆம் தேதி மதியம் வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணா்ந்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். உலக தண்ணீா் தினத்தையொட்டி, சேலம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், வீரா... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக துணை முதல்வரின் பெயரைக் கூறி ஏமாற்றிய பெண் கைது

சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெயரைக் கூறி ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டாா். அரியலூா் மாவட்டம், செந்தூா் அடுத்த கீழராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்த்சாமி (30... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிரதான எதிா்க்கட்சி அதிமுகதான்: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் பிரதான எதிா்க்கட்சி அதிமுகதான் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் புகா் மாவட்ட அதிமுக சாா்பில், நீா்மோா் பந்தல் திறப்பு விழா ஓமலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமு... மேலும் பார்க்க