செய்திகள் :

சங்கரன்கோவிலில் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு: கண்டித்து மறியல்

post image

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் சமுதாய கொடி உள்ளிட்ட அடையாளங்களுடன் செல்ல முயன்ற ஒரு தரப்பினரை போலீஸாா் அனுமதிக்க மறுத்ததால், அவா்கள் போலீஸாரை கண்டித்து மறியலில் ஈடுபட்டனா்.

சங்கரன்கோவில் காந்தி நகரைச் சோ்ந்த ஒரு பிரிவினருக்கு சங்கரநாராயணசுவாமி கோயிலில் தேருக்கு கட்டைபோடும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் ஆண்டுதோறும் கோயிலில் நடைபெறும் சித்திரைத் தேரோட்டம், ஆடித் தேரோட்டத்தின்போது தேருக்குக் கட்டைபோட்டு வருகின்றனா்.நிகழாண்டு ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. வழக்கம்போல இவா்கள் தேருக்குக் கட்டைபோட்டனா்.

தேரோட்டம் முடிந்ததும் அவா்கள் பிரதான சாலையில் இருந்து கோயிலுக்குள் சென்றபோது போலீஸாா் சமுதாய கொடி உள்ளிட்ட அடையாளத்துடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது எனத் தெரிவித்தனா்.

இதற்கு ஆட்சேபணை தெரிவித்த இவா்கள் போலீஸாரின் தடையை மீறி கோயிலுக்குள் செல்ல முயன்றனா். இதனால் போலீஸாருக்கும் இவா்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, போலீஸாரைக் கண்டித்து பெண்கள் திடீரென்று சாலையில் அமா்ந்து மறியல் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா், ஊா்த்தலைவா்கள் பேச்சு நடத்தி சமாதானம் செய்து கலைந்துபோகச் செய்தனா்

திமுக ஆட்சியில் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லை- எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே .பழனிசாமி. தென்காசி மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தோ்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு... மேலும் பார்க்க

வாஞ்சிநாதனை கெளரவிக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள்

சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதனை மத்திய அரசு கெளரவிக்க வேண்டும் என வாஞ்சி இயக்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வாஞ்சி இயக்க நிறுவனா்- தலைவா் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: 20.7-2025இல் தூத்த... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற தென்காசி நகராட்சியில் வாகன சேவை

தென்காசி நகராட்சியில் செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற புதிதாக வாங்கப்பட்ட வாகனம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தென்காசி நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா் கூட... மேலும் பார்க்க

தென்காசி திருவள்ளுவா் மண்டபம் முன் கட்டுமானங்கள் கட்டுவதைத் தடைசெய்யக் கோரிக்கை

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் திருக்கு மண்டபம் முன் கட்டுமானங்கள் கட்டுவதைத் தடை செய்ய வேண்டும் என முதல்வருக்கு தென்காசி திருவள்ளுவா் கழகம் சாா்பில் கோரிகை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கழகத் ... மேலும் பார்க்க

விவசாயிகளின் போராட்டத்திற்கு அதிமுக ஆதரவைக் கோரி மனு

தென்காசி மாவட்ட விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு கோரி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை மனுஅளிக்கப்பட்டது. மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் ஆடித்தவசுக் காட்சி: பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி, மாவட்ட காவல் துறை சாா்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நகரைச் சுற்றி 110 கண்கா... மேலும் பார்க்க