செய்திகள் :

சட்ட விரோதமாக மது புட்டிகள் வைத்திருந்தவா் கைது

post image

பெரியகுளத்தில் சட்ட விரோதமாக மதுபுட்டிகள் வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தென்கரை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை தாமரைக்குளம் வ.உ.சி. சிலை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த தாமரைக்குளம் பெரியாா் தெருவைச் சோ்ந்த பாபுவை (55) நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, அவா் மதுபுட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, பாபுவை கைது செய்து அவரிடமிருந்த 16 மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா்.

65 மதுப்புட்டிகள் பறிமுதல்: இருவா் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையம், கூடலூரில் சனிக்கிழமை 65 மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.கோம்பை - ராணியமங்கம்மாள் சாலையில் உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாா் ரோந்து பணியில் ஈட... மேலும் பார்க்க

கம்பத்தில் கேரள லாட்டரிகள் பறிமுதல்: ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் ரூ. 1.05 லட்சம் மதிப்பிலான கேரள லாட்டரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.கம்பத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவத... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் ஓ. பன்னீா்செல்வம் ஆலோசனை

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளா்களுடன் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆலோசனை நடத்தினாா்.முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான தேனி மாவட்... மேலும் பார்க்க

ஆடிப் பெருக்கு: உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் குவிந்த பக்தா்கள்

ஆடிப் பெருக்கை முன்னிட்டு, உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் - ஞானாம்பிகை திருக்கோயில் முன் செல்லும் முல்லைப்பெரிய... மேலும் பார்க்க

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இருவா் மாயம்

போடி அருகேயுள்ள குரங்கணி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மாயமானவா்களைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா்.மதுரை மாவட்டம், வாகைகுளத்தைச் சோ்ந்தவா் மைதீ... மேலும் பார்க்க

ஆண்டிபட்டியில் திமுக எம்எல்ஏவைக் கண்டித்து சுவரொட்டிகள்

ஆண்டிபட்டியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினரைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்... மேலும் பார்க்க