செய்திகள் :

சத்தீஸ்கர்: ரூ.30 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 8 நக்சல்கள் சரண்!

post image

சத்தீஸ்கர் மாநிலத்தில், கூட்டாக ரூ.30 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 8 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

நாராயணப்பூர் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 8 நக்சல்கள், இன்று (ஆக.20) பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவோயிஸ்ட் அமைப்பில் இயங்கி வந்த, சுக்லால் ஜுர்ரி, ஹுர்ரா (எ) ஹிமான்ஷு மிடியம், ராஜு பொடியம் (எ) சுனில் பொடியம், மணிராம் கொர்ராம், சுக்கு ஃபார்ஸா (எ) நாகேஷ், ராமு ராம் போயம், கம்லா கோடா மற்றும் தீபா புனெம் ஆகியோர் சரணடைந்துள்ளனர்.

இதில், சுக்லால், ஹுர்ரா ஆகியோர் மீது தலா ரூ.8 லட்சமும், பொடியம் மற்றும் காம்லா ஆகியோ மீது தலா ரூ.5 லட்சமும், மீதமுள்ளவர்கள் மீது தலா ரூ.1 லட்சமும் வெகுமதிகளாக அறிவிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, சரணடைந்த நக்சல்களுக்கு அரசு திட்டத்தின்படி, ரூ.50,000 நிவாரணமும் அவர்களது மறுவாழ்வுக்குத் தேவையான உதவிகளும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள நக்சல்கள் அழிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும், நாராயணப்பூர் மாவட்டத்தில் மட்டும் நிகழாண்டில் (2025) 148 நக்சல்கள் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பின்னோக்கிச் செல்கிறது இந்தியா: ராகுல் விமர்சனம்

In Chhattisgarh, 8 Naxals who were wanted with a collective reward of Rs 30 lakh have surrendered to security forces.

முக்கிய மசோதாக்களை கூட்டத்தொடரின் கடைசி நாள்களில் தாக்கல் செய்யலாமா? -கனிமொழி எம்.பி. கண்டனம்!

முக்கிய மசோதாக்களை கூட்டத்தொடரின் கடைசி நாள்களில் தாக்கல் செய்யலாமா? என்று திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்தார்.பிரதமா், மத்திய அமைச்சா்கள், முதல்வா் ஆகியோா் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக கைத... மேலும் பார்க்க

அக்னி - 5 ஏவுகணைச் சோதனை வெற்றி!

ஒடிசா மாநிலத்தில், ”அக்னி - 5” பாலிஸ்டிக் ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் சந்திப்பூர் மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் (ஐடிஆர்), இடைநிலை தூர... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் குளத்தில் மூழ்கி 6 குழந்தைகள் பலி!

ஆந்திரப் பிரதேசத்தின் கர்ணூல் மாவட்டத்தில், குளத்தில் மூழ்கி ஒரு சிறுமி மற்றும் 5 சிறுவர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ணூல் மாவட்டத்தின், சிகேலி கிராமத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்த 10 மு... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரிவிதிப்பு! இந்தியாவுக்கு ரூ.4.19 லட்சம் கோடி பாதிப்பு!

அமெரிக்காவின் வரிவிதிப்பால், இந்தியாவில் 48 பில்லியன் டாலர் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.பரஸ்பர வரி மற்றும் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி, இந்தியா மீது 50 சதவி... மேலும் பார்க்க

உ.பி.யில் ஜலாலாபாத் ஊரின் பெயரை பரசுராம்புரி என மாற்றிய மத்திய அரசு!

உத்தரப் பிரதேசத்திலுள்ள ஜலாலாபாத் என்ற ஊரின் பெயர் பரசுராம்புரி என இன்று (ஆக. 20) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெயரை மாற்ற வலியுறுத்தி, மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு உத்தரப் பிரதேச மாநில தலைமைச்... மேலும் பார்க்க

பின்னோக்கிச் செல்கிறது இந்தியா: ராகுல் விமர்சனம்

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாக்கள், இந்தியா பின்நோக்கிச் சென்றுகொண்டிருப்பதைக் குறிப்பதாக காங்கிரஸ் மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், முதல்வர்க... மேலும் பார்க்க