செய்திகள் :

சத்யஜித் ரேயின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!

post image

இயக்குநர் சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் மைமென்சிங்கில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், இந்திய சினிமாவுக்கு முகவரி கொடுத்தவர் என அறியப்படும் இலக்கியவாதியுமான சத்யஜித் ரேயின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது. இந்த வீடு ரேயின் தாத்தாவும் புகழ்பெற்ற இலக்கியவாதியுமான உபேந்திர கிஷோர் ரே சவுத்ரிக்குச் சொந்தமானதாகும்.

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் மைமென்சிங் நகரில் இந்த வீடு அமைந்துள்ளது. 1947 ஆம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்ட இந்த வீடு, தற்போது இடித்துவிட்டு மைமென்சிங் ஷிஷூ அகாதெமி கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுவந்தது.

பல்வேறு எதிர்ப்புகளைத் தொடர்ந்து வீட்டை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வீட்டுக்கு சத்யஜித் ரேவோ அல்லது அவரது உறவினர்களோ உரிமையாளர்கள் இல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மைமென்சிங் நகர துணை ஆணையர் முபிதுல் ஆலம் கூறுகையில், “இந்த வீட்டுக்கு சத்யஜித் ரேவோ அவரது குடும்பத்தினரோ உரிமையாளர்கள் கிடையாது. அவர்கள் யாரும் இந்த வீட்டில் வசிக்கவில்லை. அதிகாரபூர்வ ஆவணங்களின்படி, இந்த வீட்டு வங்கதேச அரசுக்குச் சொந்தமானது” என்றார்.

சத்யஜித் ரேயின் பூர்விக வீடு இடிக்கப்படும் செய்தி வெளியான நிலையில், வங்காள எழுத்தாளர் சங்கம், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் மேற்கு வங்க அரசும் இதற்கு கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தனர். மேலும், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோரும் கவலை தெரிவித்திருந்தனர்.

ஹரிகிஷோர் ரே சாலையில் உள்ள வீடு மைமென்சிங் ஷிஷு அகாடமியாகப் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், அந்த வீடு 2007 முதல் பயன்படுத்தப்படாமல் இருந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைவிடப்பட்ட வீட்டை இடித்துவிட்டு பல மாடி கட்டிடம் கட்டும் திட்டத்தை ஷிஷு அகாடமி தொடங்கியுள்ளது.

1989 ஆம் ஆண்டு அப்போதைய வங்கதேச ராணுவ ஆட்சியாளர் ஹுசைன் முகமது எர்ஷாத்தின் காலத்தில் ஷிஷு அகாடமி இந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Demolition of Satyajit Ray’s ancestral home in Bangladesh halted; officials deny family's ownership

இதையும் படிக்க :ராணுவ வாகனத்தில் பலூச். விடுதலைப் படை தாக்குதல்: மேஜர் உள்பட 29 பாக். வீரர்கள் பலி!

நேட்டோவின் பொருளாதார தடை அச்சுறுத்தலுக்கு இந்தியா பதிலடி!

ரஷியாவுடன் வா்த்தகத்தைத் தொடா்ந்தால் இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என ‘நேட்டோ’ அமைப்பின் தலைவா் விடுத்த அச்சுறுத்தலுக்கு, ‘இரட்டை நிலைப்பாடு எடுக்க வேண்டாம்’ என்று வெளியுறவு அமைச்சகம் ... மேலும் பார்க்க

விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்ப்பு!

அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் யார்? என்பது குறித்து அமெரிக்க செய்தி நிறுவனத்துக்கு விமான விபத்து புலனாய்வுப் பிரிவு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.260 பேர் பலியான ஏர் இந்தியா விமான விபத்தில... மேலும் பார்க்க

பிருத்வி-2, அக்னி-1 ஏவுகணைகளின் சோதனை வெற்றி!

ஒடிசா கடல்பகுதியில், பிருத்வி - 2 மற்றும் அக்னி - 1 பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒடிசா கடல்பகுதியிலுள்ள அப்துல் கலாம் தீவில் அமைக்கப்பட்ட ஒருங்கிணை... மேலும் பார்க்க

பிகாரில் ஒரே நாளில் மின்னல் பாய்ந்து 19 பேர் பலி!

பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், மின்னல் பாய்ந்து 19 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில், மட்டும் 19 பேர் மின்னல் பாய்ந்து பலியாகியு... மேலும் பார்க்க

பரோல் கைதியை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்! மருத்துவமனையில் பயங்கரம்!

பரோல் கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் புகுந்த சிலர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொலைக் குற்றவாளியாக பரோலில் வெளியே வந... மேலும் பார்க்க

வெறும் ரூ.50 ஆயிரத்தில்! ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீ. வரை செல்லும் டாடாவின் இவி பைக்!

ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீட்டர் வரை செல்லும் மின்சார பைக் ஒன்றை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருக்கும் டாடா நிறுவனம், தற்போதைய ட... மேலும் பார்க்க