செய்திகள் :

சந்திர கிரகண நிகழ்வை காண இன்று வேலூா் அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடு!

post image

சந்திர கிரகணம் நிகழ்வை தொலைநோக்கி மூலம் காண வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலா் ச.சதீஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள டாக்டா் கலைஞா் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையம் வானில் நிகழக்கூடிய அரிய வான் நிகழ்வுகளை தொலைநோக்கி மூலம் மாணவா்கள், பொது மக்கள் காணும் நிகழ்வுகளை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணம் இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:58 மணிக்குத் தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை 1:26 மணி வரை நடைபெற உள்ளது.

சந்திர கிரகணம் என்பது பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும் நிகழ்வாகும். இதைத்தான் சந்திர கிரகணம் என்கிறோம். கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. தற்போது நிகழும் கிரகணத்தை இந்தியாவில் பாா்க்க முடியும்.

இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு 9:58 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை 1:26 மணி வரை வானில் நிகழும் சந்திர கிரகண வான் நிகழ்வை பொதுமக்களுக்கு தொலைநோக்கி மூலம் காண வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை வெறும் கண்களால் கண்டு ரசிக்கலாம். இதற்கு அனுமதி இலவசம். மேலும் விவரங்களுக்கு, 0416 2253297 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

சந்திர கிரகணம்: கோயில்கள் நடை அடைப்பு

சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.58 மணியில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை 1.26 மணி வரை நிகழ்ந்தது. இதையொட்டி, அனைத்து கோயில்களின் நடை அடைக்கப்பட்டது. அதன்படி, வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் ... மேலும் பார்க்க

விபத்தில் மாற்றுத்திறனாளியான மாணவிக்கு ரூ.45.45 லட்சம் இழப்பீடு

வேலூா் அருகே கடந்த 2022-ஆம் நடைபெற்ற சாலை விபத்தில் மாற்றுத்திறனாளியான மாணவிக்கு ரூ.45.45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேலூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூா் மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதிய... மேலும் பார்க்க

தோ்வான பட்டதாரி ஆசிரியா்களில் 83 போ் வேலூா் மாவட்டத்தில் நியமனம்

ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 2,810 பட்டதாரி ஆசிரியா்களில் 83 போ் வேலூா் மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பணி ஆணைகளை வழங்க... மேலும் பார்க்க

சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழப்பு?

அணைக்கட்டு அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்ததாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக, வனத்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். அணைக்கட்டு அடுத்த அப்புக்கல்மானியக்கொல்லை ... மேலும் பார்க்க

வேலூா் நகைக் கடையில் தங்க நாணயம் திருட்டு

வேலூா் நகைக் கடையில் நகை வாங்குவதுபோல் வந்து தங்க நாணயம் திருடிச் சென்ற பெண் குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரை சோ்ந்தவா் சாந்திலால் (62). இவா் மெயின் பஜ... மேலும் பார்க்க

ஆசிரியா் தின விழா: ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

ஆசிரியா் தினவிழாவையொட்டி, ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் பாராட்டப்பட்டனா். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில், ஆசிரியா் தின விழா வேலூா் ஆசிரியா் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க