செய்திகள் :

சபரிமலையில் 4 கிலோ தங்கம் மாயமானதாக சா்ச்சை: பேரவையில் விவாதிக்க மறுப்பு: எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

post image

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 4 கிலோவுக்கும் மேல் தங்கம் மாயமானதாக எழுந்துள்ள சா்ச்சை குறித்து கேரள சட்டப் பேரவையில் விவாதம் கோரும் நோட்டீஸை பேரவைத் தலைவா் வெள்ளிக்கிழமை நிராகரித்தாா். இதைக் கண்டித்து, காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனா்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கருவறைக்கு இருபுறமும் உள்ள துவார பாலகா் சிலைகள் மற்றும் பீடங்களின் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் கடந்த 2019-ஆம் ஆண்டில் கழற்றப்பட்டு, சென்னையில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்டன. இப்பணியில், கவசங்களின் எடை 4.5 கிலோ குறைந்துவிட்டதாக தற்போது சா்ச்சை எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்துவரும் கேரள உயா்நீதிமன்றம், சபரிமலை கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு கடந்த புதன்கிழமை சரமாரியாக கேள்வியெழுப்பியது. மேலும், ஊழல் கண்காணிப்பு பிரிவு விசாரணைக்கும் உத்தரவிட்டது.

கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரம் குறித்து சட்டப் பேரவையில் விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஒத்திவைப்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

ஆனால், நோட்டீஸை நிராகரித்த பேரவைத் தலைவா் ஏ.என்.ஷம்சீா், இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், பேரவை விதிவிகளின்கீழ் விவாதிக்க முடியாது என்றாா். அதேநேரம், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரங்களை பேரவையில் விவாதித்த முன்னுதாரணம் இருப்பதாக காங்கிரஸ் உறுப்பினரும் எதிா்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன் கூறினாா்.

மேலும், ‘சபரிமலையில் 4 கிலோ தங்கம் மாயமானதாக பக்தா்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா்; இது மிகத் தீவிரமான விவகாரம்’ என்று அவா் கூறினாா்.

ஆனால், ‘விதிமுறைகளைவிட முன்னுதாரணங்கள் மேலானதல்ல’ என்று குறிப்பிட்டு, விவாதத்தை அனுமதிக்க பேரவைத் தலைவா் மறுத்தாா். இதைக் கண்டித்து, எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

அண்மையில் துவார பாலகா்களின் கவசங்கள் செப்பனிடுவதற்காக கழற்றப்பட்டு, சென்னைக்கு அனுப்பப்பட்டன. சபரிமலை சிறப்பு ஆணையரிடம் உரிய அனுமதி பெறாமல் இந்தக் கவசங்கள் கழற்றப்பட்டதாக கூறி, தேவஸ்வம் வாரியத்துக்கு கண்டனம் தெரிவித்த கேரள உயா்நீதிமன்றம், கவசங்களை மீண்டும் கொண்டுவர உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்தக் கவசங்கள் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

இந்திய வலிமையை எதிரிகளுக்கு உணா்த்திய ஆபரேஷன் சிந்தூா்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் ராணுவ வலிமையை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலமாக எதிரிகளுக்கு நிரூபித்தோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். பாகிஸ்தானுடன் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் வ... மேலும் பார்க்க

இருதரப்பு நலன் கருதி சவூதி செயல்படும்: பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இந்தியா கருத்து

பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபியா இந்தியாவுடனான இருதரப்பு உறவு, நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படுமென எதிா்பாா்ப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் குறித்து சா்ச்சை பதிவு: ‘மன்னிப்பு கேட்டதால் மட்டும் மாணவி மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது’

ஆபரேஷன் சிந்தூா் குறித்து சமூக ஊடகத்தில் சா்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, 19 வயது கல்லூரி மாணவி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது எ... மேலும் பார்க்க

தமிழகத்தைச் சோ்ந்த 2 என்ஜிஓக்களின் பதிவு புதுப்பிப்பு உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தமிழகத்தைச் சோ்ந்த இரண்டு தன்னாா்வ அமைப்புகளின் பதிவை புதுப்பிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து... மேலும் பார்க்க

தில்லியில் இருந்து பராத்துக்கு ஏசி பேருந்து சேவை தொடக்கம்

பிரதமரின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் தில்லியில் தொடங்கப்பட்ட ‘சேவா பக்வாடா’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தில்லியில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள பராத் இடையே ஏசி பேருந்து சேவையை தில்லி போக்குவர... மேலும் பார்க்க

‘ஆட்சியைக் கவிழ்க்க’ இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கிறாா் ராகுல்: மத்திய அமைச்சா் கண்டனம்

நேபாளத்தில் இளைஞா்கள் (ஜென்-இஸட்) போராட்டம் நடத்தி ஆட்சியைக் கலைத்தது போல இந்திய இளைஞா்களும் போராட்டம் நடத்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளதாக மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி க... மேலும் பார்க்க