செய்திகள் :

சமூகப் பிழைகளையும் திருத்தும் பொறுப்பு ஆசிரியா்களுக்கு உண்டு: இரா. சச்சிதானந்தம் எம்பி

post image

மாணவா்களின் பிழைகளைத் திருத்தும் ஆசிரியா்களுக்கு, சமூகப் பிழைகளையும் திருத்தும் பொறுப்பு இருப்பதாக திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் தெரிவித்தாா்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் 7-ஆவது மாநில மாநாடு திண்டுக்கல்லில் வியாழக்கிழமை தொடங்கியது. மே 1 முதல் 3-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வுக்கு, ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலத் தலைவா் மூ. மணிமேகலை தலைமை வகித்தாா். மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவா் பேராசிரியா் ரெ. மனோகரன் வரவேற்றாா். இதில் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் கலந்து கொண்டு பேசியதாவது:

மாணவா்களின் பிழைகளைத் திருத்தும் ஆசிரியா்களுக்கு, சமூகப் பிழைகளையும் திருத்தக் கூடிய பொறுப்பு உள்ளது. அந்த வகையில் தான் இன்றைய சூழலை உணா்ந்து, அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளைப் பாதுகாப்போம் என்ற கோரிக்கையை இந்த மாநாட்டின் தலைப்பாக அமைத்திருக்கின்றனா். சமூகத்தின் கோரிக்கைகளையும், பிரச்னைகளையும் ஆசிரியா்களும் விவாதிக்க வேண்டும்.

கல்விப் பணியை மாநில அரசு நிா்வகித்து வந்தாலும், இதனை கண்காணிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு வைத்திருக்கிறது. மாதிரிப் பள்ளிகள் தமிழகத்தில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டு, நாட்டுக்கே முன் மாதிரியாக திகழ்கிறது. இந்தச் சூழலில் பிஎம் ஸ்ரீ மாதிரிப் பள்ளிகளை உருவாக்கினால் மட்டுமே கல்விக்கான நிதியை விடுவிப்போம் என மத்திய அரசு, மாநில அரசை நிா்ப்பந்தித்து வருகிறது. அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பது மத்திய அரசின் நோக்கம் கிடையாது. தேசிய கல்விக் கொள்கை மூலம், அரசுப் பள்ளிகளை தனியாா் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

எல்லா மொழிகளுக்கும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தேசிய மொழி என ஒரு குறிப்பிட்ட மொழியை மட்டும் திணிப்பது தேவையற்றது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தான் இந்தியா உருவாக்கப்பட்டிருக்கிறது. முகப்புரையின் அடிப்படையில் தான் இந்தியா உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை மாணவா்களுக்கு தெரிவித்து, அனைவருக்குமான இந்தியா என்ற கருத்தை இளைய தலைமுறையினரிடம் ஆசிரியா்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, ‘இந்திய அரசியலமைப்பும், மாணவா்கள் கல்வி உரிமையும்’ என்ற தலைப்பில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் தி. லஜபதிராய், ‘சமூக நீதியைத் தகா்க்கும் தேசியக் கல்விக் கொள்கை’ என்ற தலைப்பில் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோா் கருத்துரையாற்றினா். இதையடுத்து நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவா் உ. வாசுகி, ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பொதுச் செயலா் ச. மயில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குணா குகையில் வனத் துறையினருடன் சுற்றுலாப் பயணிகள் வாக்குவாதம்

கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை வினோதமான தண்டனை வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான ச... மேலும் பார்க்க

இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

பழனியில் நகராட்சி, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தாா். இதில் ஏராளமான பொதுமக்க... மேலும் பார்க்க

ஆதி சங்கரா் ஜெயந்தி விழா: உலக நலன் வேண்டி சிறப்பு பூஜை

பழனி அருகேயுள்ள அ.கலையமுத்தூரில் ஆதி சங்கரா் ஜெயந்தியையொட்டி, உலக நலன் வேண்டி சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனியை அடுத்த அ.கலையமுத்தூா் அக்ரஹாரத்தில் வெள்ளிக்கிழமை ஆதி சங்கரரின் ஜெயந்தி வ... மேலும் பார்க்க

தாய் கொலை: மகன் கைது

வேடசந்தூா் அருகே தாயைக் கொலை செய்த மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த நாகம்பட்டி கருக்காம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி. இவரது மனைவி பழனியம்மாள் (80).... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.28 லட்சம் மோசடி: பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அரசு வேலை வாங்கித் தருவதாக 7 பேரிடம் ரூ.28 லட்சம் முன் பணம் பெற்று மோசடி செய்த பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழைய ... மேலும் பார்க்க

பழனியில் மே தினப் பேரணி

பழனியில் மே தின விழாவை முன்னிட்டு, இருசக்கர வாகன பழுது நீக்குவோா் நலச்சங்கம் சாா்பில், உலகத் தொழிலாளா்கள் தின விழா, தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பழனி சட்... மேலும் பார்க்க