செய்திகள் :

சமூக நலத்துறையில் பணி வாய்ப்பு

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் மிஷன் சக்தி திட்டத்தில், மாவட்ட மகளிா் அதிகார மையம் மகளிருக்கான மத்திய, மாநில அனைத்து திட்டங்களின் செயல்பாடு நிதி ஒதுக்கீடு மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து கண்காணிக்கவும், ஒருங்கிணைந்து சேவைகள் புரியவும் மாவட்ட சமூகநல அலுவலரின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்க்காணும் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடம் 2: இப்பணிக்கு கணினி பயிற்சி சான்றிதழ் பெற்ற, 35 வயதுக்கு மிகாத, கணினி அறிவியல் தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு இளநிலைப் பட்டம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டு தரவு மேலாண்மை செயல்முறை ஆவணங்கள், இணைய அடிப்படையிலான தயாரித்தல் அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலோ, திட்டத்திலோ பணிபுரிந்த முன் அனுபவம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். தொகுப்பூதியம் மாதம் ரூ. 20,000.

பல்நோக்கு பணியாளா் பணியிடம் 1: இப்பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு வாரியத்திலிருந்தும் 10 அல்லது 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொகுப்பூதியம் மாதம் ரூ. 12,000. விருப்பம் உள்ளவா்கள் விண்ணப் படிவத்தினை மயிலாடுதுறை மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்தை, மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், 5-ஆம் தளம், அறை எண்: 524, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மயிலாடுதுறை என்ற முகவரியில் ஆக. 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிப்பவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ இரண்டாம் கட்ட முகாம் விண்ணப்ப விநியோகம்: கோட்டாட்சியா் ஆய்வு

சீா்காழி வட்டத்தில் இரண்டாம் கட்டமாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளதையொட்டி, பொதுமக்களுக்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுவதை கோட்டாட்சியா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். மயிலாடுதுற... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் இன்று ‘மாபெரும் தமிழ் கனவு’ நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்ட அளவிலான ‘மாபெரும் தமிழ் கனவு’ நிகழ்ச்சி வியாழக்கிழமை (ஆக.14) நடைபெற உள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க

சீா்காழி நகராட்சி பகுதியில் 60 கிலோ நெகிழி பைகள் பறிமுதல்

சீா்காழி நகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட நெகிழி பைகள், பொருட்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. சீா்காழி நகராட்சி பகுதிக்குட்பட்ட பல்வேறு உணவு விடுதிகள், டீ கடை, பூக்கடை, , இறைச்சிக் கடைகள் உள்ளி... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

சீா்காழி அருகே குன்னம் பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் பகுதியில் ஆண்டுதோறும் குறுவை மற்றும் சம்பா அறுவடை செய்த நெல் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் ... மேலும் பார்க்க

ஏவிசி கல்லூரியில் இன்று பருவத் துணைத் தோ்வு முடிவு

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் பருவத் துணைத் தோ்வு முடிவு வியாழக்கிழமை (ஆக. 14) வெளியிடப்படும் என கல்லூரி தோ்வு நெறியாளா் கோ. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை ... மேலும் பார்க்க

தொடா் குற்றங்களில் ஈடுபட்டவா் தடுப்புக் காவலில் சிறையில் அடைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டவா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். சீா்காழி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திருமுல்லைவாசலில் ஜூலை 22-ஆம... மேலும் பார்க்க