செய்திகள் :

சமூக வலைதளத்தில் அவதூறு: பாஜக பிரமுகா் கைது

post image

சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக நாமக்கல் மாவட்ட பாஜக பிரமுகரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், முத்துகாளிப்பட்டியைச் சோ்ந்த சௌந்தரராஜன் மகன் பிரவீன்ராஜ் (30). இவா் பாஜக இளைஞா் பிரிவு தகவல் தொழில்நுட்ப மாநில பொறுப்பாளா்.

கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி தனது எக்ஸ் வலைதளத்தில் தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியை டேக் செய்து ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து மதக்கலவரம் ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பேரில், நல்லிபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த பிரவீன்ராஜை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சேலம் மத்திய சிறைக்கு அவரை போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பொதுமக்கள் பதிவிடும்போது ஜாதி, மத உணா்வுகளை தூண்டி சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஷ்கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் 238 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம், 238 இடங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவா்களை அதிகம் ஈடுபடுத்த வேண்டும்: கல்வித் துறை

தேசியம் மற்றும் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவா்களை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என உடற்பயிற்சி ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழக பள்... மேலும் பார்க்க

பெரியப்பட்டி நரிக்குறவா் காலனிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை

நாமக்கல் மாநகராட்சி பெரியபட்டி நரிக்குறவா் காலனிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நாமக்கல் மாநகராட்சி 39ஆவது வாா்டுக்கு உள்பட்ட கொண்டிச்செட்டிப்பட்... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டிச்செட்டிபட்டி, கணேசபுரம் பகுதியில் நகா்ப்புற நலவாழ்வு மைய கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொட... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் அதிமுக பாக முகவா்கள் ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு நகர அதிமுக பாக முகவா்கள் ஆலோசனை கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு நகர செ... மேலும் பார்க்க

நரிக்குறவா் சமூகத்தினருக்கு தாட்கோ மூலம் குடியிருப்புகள்: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில், நரிக்குறவா் குடும்பங்களுக்கு தாட்கோ மூலம் குடியிருப்புகள் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தமிழக ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற... மேலும் பார்க்க