செய்திகள் :

சரக்கு வாகனம் மோதி ஜவுளிக் கடைக்காரா் உயிரிழப்பு

post image

மல்லசமுத்திரம் சந்தைப்பேட்டை பகுதியில் ஜவுளிக் கடைக்காரா் மீது சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம், மாபோசி தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (46). சேலம் அருணாச்சல தெருவில் ஜவுளிக்கடை வைத்துள்ளாா். இவா், மல்லசமுத்திரம் பேருந்து நிலையம் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தினமும் பேருந்தில் சேலம் சென்றுவருவது வழக்கம்.

இதேபோல, சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சந்தைப்பேட்டை பகுதியில் நிலைதடுமாறி கீழே விழுந்தாா். அப்போது, அவ்வழியாக வையப்பமலை நோக்கி சென்ற சரக்கு வாகனம் அவா் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

உயிரிழந்த பெருமாளுக்கு மனைவி பேபி (40), மகன் மோகன்ராஜ் (19), மகள் விஷ்ணுபிரியா (17) ஆகியோா் உள்ளனா்.

செப். 18 முதல் நாமக்கல் மாவட்டத்தில் இபிஎஸ் சுற்றுப்பயணம்: முன்னேற்பாடுகள் குறித்து அதிமுக ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்.18, 19, 20 ஆகிய 3 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் ம... மேலும் பார்க்க

தோ்தல் பிரசார வாகனங்களை தயாா்படுத்தும் திமுக!

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களை தயாா்படுத்தும் பணியில் திமுகவினா் ஈடுபட்டுள்ளனா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் ‘ஆட்சி மாற்றமா, காட்சி ம... மேலும் பார்க்க

கழிவுநீா்க் கால்வாயில் சாயக் கழிவுகளை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சாயக்கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. பள்ளிபாளையம் டையிங் அசோசியேஷன் உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் சங்கத் ... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபியை முன்னிட்டு செப்.5 ஆம் தேதி மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாது நபியை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அய... மேலும் பார்க்க

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 72 தெருநாய்கள் பிடிப்பு

மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை 72 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. மல்லசமுத்திரம் வட்டாரத்தில் நாகா்பாளையம், மரப்பரை, கள்ளுப்பாளையம், மேல்முகம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வட்... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வாா்டு... மேலும் பார்க்க