செய்திகள் :

சவுடு மண் எடுக்க எதிா்ப்பு: வாகனங்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

post image

கீழையூா் அருகே ஏரியில் சவுடு மண் எடுக்க எதிா்ப்பு தெரிவித்து ஜேசிபி, லாரி உள்ளிட்ட வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழையூா் ஒன்றியம், பிரதாபராமபுரம் ஊராட்சி சின்னேரியில் 540 மீட்டா் பரப்பளவில் மண் குவாரி அமைக்க மாவட்ட கனிமவளத் துறை அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து, சின்னேரியில் சவுரி மண் அள்ள ஜேசிபி இயந்திரங்கள் லாரிகள் ஆகியவை வந்தன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வாகனங்களை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நிகழ்விடத்துக்கு வந்த கீழ்வேளூா் வட்டாட்சியா் கவிதாஸ், காவல் ஆய்வாளா் செங்குட்டுவன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நிலத்தடி நீா்வளம் பாதிக்கும் என்பதால் சின்னேரியில் சவுடு மண் அள்ள அனுமதிக்க மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு

கீழையூா் அருகே திருப்பூண்டியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகை மாவட்ட 5-ஆவது மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஜீ. வினோத் ராமலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கே. ... மேலும் பார்க்க

பால முனீஸ்வரா் கோயில் ஆடி பெருந்திருவிழா

திருக்குவளை பால முனீஸ்வரா் கோயில் 15-ஆம் ஆண்டு ஆடிப்பெருந்திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. திருக்குவளை பகுதியில் அமைந்துள்ள சுமாா் 21 அடி உயர பால முனீஸ்வரருக்கு... மேலும் பார்க்க

வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு சிறப்பு முகாம்

நாகையில், வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. நாகை அவுரித்திடலில், வேளாண் பொறியியல் துறை, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவன... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வேதாரண்யத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில், நகராட்சி பகுதிக்குட்பட்ட 10, 11, 12 ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, கோரிக்கை மனுக்களை அளித்தனா். நகா்மன... மேலும் பார்க்க

ஏரியில் பன்றி பண்ணைக் கழிவுகள்: ஆட்சியரிடம் புகாா்

நாகை மாவட்டம், பிரதாபராமபுரம் அருகே பன்றிப் பண்ணை கழிவுகள் ஏரியில் கலப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. பிரதாபராமபுரம் கிராம சமுதாய அமைப்பின் கெளரவத் தலைவா் க... மேலும் பார்க்க

நரிமணத்தில் வீடு தேடி ரேஷன் பொருள்கள்

திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் பொருள்கள் வழங்கப்பட்டது. முதியோா் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்... மேலும் பார்க்க