செய்திகள் :

சாகப் போகிறேன் இல்லையென்றாலும் கொன்றுவிடுவார்கள்: கேரள கர்பிணியின் கடைசி பதிவு!

post image

கேரள மாநிலம் திருச்சூரில் 23 வயது கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளங்குளரைச் சேர்ந்த நௌஃபாலின் மனைவி ஃபசீலா,. ஜூலை 29 அன்று தனது கணவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கணவர் நௌஃபால், மாமியார் ரம்லாவை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் வரதட்சணை கொடுமையே அவரது தற்கொலைக்குக் காரணம் எனத் தெரிய வந்ததுள்ளது. வரதட்சணை கேட்டு ஃபசீலாவின் கணவரும், மாமியாரும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

உச்சக்கட்டத்தில் கொடுமை தாள முடியாமல் கர்ப்பிணிப் பெண்ணான ஃபசீல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். கடைசியாக தன் தாய்க்கு வாட்ஸ்ஆப் மூலம் செய்தி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

ஃபசீல் அனுப்பிய வாட்ஸ் ஆப் செய்தியில்,

தான் இரண்டாவது முறையாகக் கர்ப்பமாக இருப்பதாகவும், கணவர் தனது வயிற்றில் பல முறை உதைத்து கையை உடைத்ததாகவும் தனது மாமியார் தன்னைத் துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அம்மா "நான் சாகப்போகிறேன் இல்லையென்றால் அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்" என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

பெண்ணின் உறவினர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஃபசீலா தனது குடும்பத்தினரிடம் ஏற்கெனவே தன் கணவர் வீட்டில் கொடுமை செய்வதாக சொல்லியிருக்கிறாள். ஆனால் பெற்றோர்கள் இதுபோன்ற பிரச்னைகள் ஒவ்வொரு வீட்டிலும் நிகவது தான். பொறுத்துக்கொண்டு செல்லுமாறு மகளுக்கு அறிவுரை கூறி அனுப்பியதாக அவர் கூறினார்.

தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருச்சூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் விசாரணை நடைமுறைக்குப் பிறகு, ஃபசீலாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

A 23-year-old pregnant woman allegedly died by suicide at her husband’s residence in Thrissur on Tuesday after prolonged domestic violence at the hands of her husband and his mother, a chilling message she sent to her mother has revealed.

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற பாகிஸ்தானுக்கு தொடா் வலியுறுத்தல்: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைவிட்டு உடனடியாக வெளியேற பாகிஸ்தானை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என மத்திய அரசு வெள்ளிக்கி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரை: மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமா்

தொடா்ந்து 12-ஆவது முறையாக சுதந்திர தின உரையாற்ற உள்ள நிலையில், தனது பேச்சில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனைகளை அனுப்புமாறு பொதுமக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.நாட்டின் சு... மேலும் பார்க்க

பணம் ஈட்டும் விளையாட்டுகள்: சிசிஐயிடம் கூகுள் முன்மொழிவு

இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோரில் பணம் ஈட்டும் விளையாட்டுகளை அனுமதிக்க இந்திய தொழில் போட்டி ஆணையத்திடம் (சிசிஐ) கூகுள் நிறுவனம் முன்மொழிந்துள்ளது.இதுதவிர, இந்தியாவில் கூகுள் விளம்பர கொள்கையில் மாற்றங்க... மேலும் பார்க்க