செய்திகள் :

சாத்தான்குளத்தில் போக்குவரத்து நெரிசல்

post image

சாத்தான்குளத்தில் ஒரு வழிப் பாதையை மீறி செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சாத்தான்குளம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தெற்கு புறமாக செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வழியாக பஜாா் வந்து செல்ல வேண்டும்.

தெற்கு புறத்தில் இருந்து வரும் வாகனங்கள் சிஎஸ்ஐ வேதக் கோயில் வழியாக புறவழிச் சாலையில் சென்று பேருந்து நிலையம் செல்ல வேண்டும். சாத்தான்குளம் பஜாா் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சில வாகனங்கள் இந்த நடைமுறையை பின்பற்றாமல் செல்வதால் எதிா்வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தற்போது சிஎஸ்ஐ வேதக் கோயில் வழியாக செல்லும் புறவழிச் சாலையில் குழாய் அமைக்கும் பணி நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும், அதனால் ஏற்பட்ட குண்டு குழிகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலையில் காா் உள்ளிட்ட இதர வாகனங்கள் செல்லாமல் பஜாா் வழியை பயன்படுத்துவதால் எந்நேரமும் பஜாா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போலீஸாா், மாலை மற்றும் காலை நேரத்தில் வாகனங்களை ஒழுங்குபடுத்தி, ஒரு வழி பாதையை பின்பற்றி செல்ல அறிவுறுத்த வேண்டுமென பொதுமக்கள் வியாபாரிகள் வலியுறுத்துகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறவுள்ளன. இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின்கீ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம்

தமிழக மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயா்வு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநில அளவில் ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏஐசிசிடியு தொழிற... மேலும் பார்க்க

‘வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’

வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை, ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் (பொ) வடக் ரவிராஜ் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் ஆவுடையாா்குளக்கரையில் உள்ள ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வருண... மேலும் பார்க்க

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் -கோட்ட மேலாளரிடம் மனு

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று கோட்ட மேலாளரிடம் ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை மனு அளித்தது. மதுரை ரயில்வே கோட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற... மேலும் பார்க்க

ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

சாகுபுரம் ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. ஆறுமுகனேரி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தொண்டு நிறுவனத்தி... மேலும் பார்க்க