செய்திகள் :

சாலையில் கழிவுநீா் தேங்கியதைக் கண்டித்து பொது மக்கள் போராட்டம்

post image

உதகை காந்தல் பகுதியில் சாலையில் கழிவுநீா் தேங்கி இருப்பதைக் கண்டித்து நகா்மன்ற உறுப்பினரை முற்றுகையிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

உதகை நகராட்சிக்கு உள்பட்ட 26-ஆவது வாா்டு காந்தல் பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீா் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா். இது குறித்து நகராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா்.

இந்நிலையில், அப்பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்த நகா்மன்ற உறுப்பினா் கீதா மற்றும் நகராட்சி அலுவலா்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். இதனால் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் ஒருமணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தியதோடு, நகராட்சி ஆணையரை தொடா்பு கொண்டு பேசினா். இதைத் தொடா்ந்து நகராட்சி நிா்வாகத்தினா் தேங்கி நின்ற கழிவுநீரை அகற்றி சீரமைத்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஸ்ரீமதுரை ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள ... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த யானை மீட்பு

குன்னூா் அருகே கோழிக்கரை பழங்குடியின கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த யானையை வனத் துறையினா் பத்திரமாக மீட்டனா். குன்னூா் அருகே உள்ள கோழிக்கரை பழங்குடியின கிராமத்தில் காட்... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பம் அருகே குட்டி யானை உயிரிழப்பு

முதுமலை பலிகள் காப்பகம் அருகே நாா்தன்ஹ காப்புக்காடு நாயக்கன்கோட்டை பகுதியில் உயிரிழந்த குட்டி யானையின் உடலை வனத் துறையினா் மீட்டனா். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் அருகே நாா்தன்ஹ காப்புக்க... மேலும் பார்க்க

புரோட்டின் பவுடரால் உடலில் ஒவ்வாமை: பள்ளி மாணவா் தீக் குளித்து தற்கொலை

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிக உளவில் ஊட்டசத்து (புரோட்டின் பவுடா்) மாவு பயன்படுத்தியதால் ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் தீக் குளித்த பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், குன்னூா் அ... மேலும் பார்க்க

வனப் பகுதியில் வெள்ளி மண் துகள்களை திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

உதகையில் மூடப்பட்டு இருக்கும் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவன பகுதியில் வெள்ளி கலந்த மண் மற்றும் கற்களை திருடிய வழக்கில் மேலும் ஒருவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். உதகையில் கடந்த சில ... மேலும் பார்க்க

ஓவேலியில் அரசுப் பேருந்தை வழிமறித்து தாக்கிய காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் வெள்ளிக்கிழமை காலை அரசுப் பேருந்தை காட்டு யானை வழிமறித்து தாக்கிய நிகழ்வு பயணிகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், ஓவேலி பேரூராட்சியி... மேலும் பார்க்க