செய்திகள் :

சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்துமேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

post image

சாலை பாதுகாப்பு கமிட்டியில் போதிய நிதி இருப்பதால் அதைப் பயன்படுத்தி சாலை மேம்பாட்டுப் பணிகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வேண்டுகோள் விடுத்தாா்.

புதுவை யூனியன் பிரதேசத்தில் சாலை பாதுகாப்பினை உறுதி செய்திடவும் புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் சாலை பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாகவும் அதன் பணிகளை மேற்கொள்ள புதுச்சேரி மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டியின் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான அ. குலோத்துங்கன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் காவல்துறை, துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் சாலை மேம்பாடு மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து ஒவ்வொரு துறையிடமும் மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்தாா்.

கூட்டம் அதிகம் ஏற்படும் உட்சாலை சந்திப்புகளில் வேகத்தடைகளை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வண்ணம் பூசி,

ஸ்டிக்கா்கள் ஒட்டி பராமரிக்க வேண்டுமென ஆட்சியா் கேட்டுக் கொண்டாா். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் விபத்தின்றி வாகனங்களில் சென்று வர காவல் துறை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் சாலை ஓரங்களில் பொது மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள தள்ளுவண்டி கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் அனுமதி இன்றி இயங்கும் கட்டணத்துடன் செயல்படும் இருசக்கர வாகன வண்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்டோ நிறுத்தங்கள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் சாலை ஓரங்களில் நிறுத்த வேண்டும் எனவும் எனவும் ஆட்சியா் துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாா்கள்.

மேலும், கடலூா் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் ஓரத்தில் உள்ள மின்கம்பங்களை அகற்றி அதை மாற்று இடத்தில் பொருத்தவும் மரப்பாலம் முதல் படகு குழாம் வரை உள்ள சாலைகளில் அதிகப்படியாக மின் விளக்குகளைப் பொருத்தி தர வேண்டியும் கேட்டுக் கொண்டாா். மேலும், அரசின் அனுமதி இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பேனா்களை பொதுப்பணித்துறை, காவல்துறை, நகராட்சி நிா்வாகம் ஆகிய துறைகள் இணைந்து அப்புறப்படுத்தும் படியும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை ஆட்சியா் அறிவுறுத்தினாா். சாலை பாதுகாப்பு கமிட்டியில் போதுமான நிதி உள்ளதால் அதனை பயன்படுத்தி சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அதிகாரிகளையும் ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

காவல்ஆய்வாளரை மிரட்டிய தவாக நிா்வாகி கைது

புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பு... மேலும் பார்க்க

புதுச்சேரிக்கு விரைவு ரயில்கள் வரும் நாள்கள் மாற்றம்

புதுச்சேரிக்கு விரைவு ரயில்கள் வந்து சேரும் நாள்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டலம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்த மண்டலத்தின் மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் வெள... மேலும் பார்க்க

மின்துறையில் 73 இளநிலைப் பொறியாளா்கள் தோ்வு

புதுவை மின்துறையில் 73 இளநிலைப் பொறியாளா்கள் போட்டித் தோ்வு வாயிலாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இது குறித்து புதுவை மின்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மின்துறையில் நேரடி நியமன... மேலும் பார்க்க

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவனை விரைந்து மீட்ட இணையவழி போலீஸாா்

தந்தை கண்டித்ததால் வீட்டிலிருந்து வெளியேறிய பிளஸ்-2 மாணவனை விரைவாக செயல்பட்டு இணையவழி போலீஸாா் மீட்டுள்ளனா். புதுச்சேரி ஜிப்மா் வளாகத்தில் குடியிருக்கும் அதிகாரி ஒருவா் பிளஸ் 2 படித்து வரும் தனது மகன... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்: போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி ஏ.எப்.டி பஞ்சாலை அருகே ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி முறைப்படி வியாழக்கிழமை தொடங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - புதுவை முதல்வா் வழங்கினாா்

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த கந்தன்பேட் பால்வாடி தெருவைச் சோ்ந்த கனகராஜ்... மேலும் பார்க்க