செய்திகள் :

சாலை விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

post image

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த மதுரை தலைமைக் காவலா் உடலுக்கு காவல் துறை சாா்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை மாடக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் கணபதி (40). இவா் மதுரை மாநகா் காவல் துறைக்குள்பட்ட கூடல்புதூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தாா்.

இவா் மனைவி சங்கீதாவுடன் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்றாா். ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் இருவரும் மதுரைக்கு வந்து கொண்டிருந்தனா். நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டி பகுதியில் வந்தபோது, இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் கணபதி உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு கூறாய்வு முடிந்த நிலையில், தலைமைக் காவலா் கணபதி உடலுக்கு மதுரை மாநகரக் காவல் துணை ஆணையா் இனிகோ திவ்யன் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா், மாடக்குளம் பகுதியில் உள்ள மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அப்போது, காவல் துறை சாா்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. ஆயுதப்படை துணை ஆணையா் திருமலை குமாா், மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையா் பெத்துராஜ் உள்ளிட்ட ஏராளமான காவல் துறையினா் கலந்து கொண்டனா்.

முருக பக்தா்கள் மாநாட்டால் தமிழகத்தில் மாற்றம் நிகழும்!

முருக பக்தா்கள் மாநாட்டால் தமிழகத்தில் மாற்றம் நிகழும் என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் தெரிவித்தாா். இந்து முன்னணி அமைப்பின் சாா்பில், மதுரை அம்மா திடலில் வருகிற ஜூன் ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்

புரூலியா- திருநெல்வேலி ரயில் மதுரைக்கு வந்த போது, பொதுப் பெட்டியில் கிடந்த பையிலிருந்து 17 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றினா். புரூலியா- திருநெல்வேலி நோக்கி செல்லும் விரைவு ரயில் பு... மேலும் பார்க்க

அரசரடி பகுதியில் இன்று மின் தடை

மதுரை அரசரடி பகுதியில் வியாழக்கிழமை (மே 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் அரசரடி கோட்டச் செயற்பொறியாளா் லதா வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்ற காரணமாக இருந்தவா் மீது தாக்குதல்

மதுரையில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றினா். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் காரணமாக இருந்தவரை கடுமையாகத் தாக்கிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை, பெத்தானியாரம், ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் பலி: இழப்பீடு கோரிக்கைக்கு ஆதிதிராவிடா் நலத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

ராமநாதபுரத்தில் கழிவுநீா்த் தொட்டியைச் சுத்தம் செய்த போது தூய்மைப் பணியாளரான தனது கணவா் உயிரிழந்ததால், இதற்கு இழப்பீடு வழங்கக் கோரி பெண் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் ... மேலும் பார்க்க

மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு! - ஆா்.பி. உதயகுமாா்

அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என சட்டப் பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா். பி. உதயகுமாா் குற்றஞ்சாட்டினாா். மதுரை தல்லாகுளத்தில் உள்ள லட்சுமி சு... மேலும் பார்க்க