செய்திகள் :

சிக்ஸர் மழை பொழிந்த கிளாசன், டிராவிஸ் ஹெட்; ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத் மீண்டும் சாதனை!

post image

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

இதையும் படிக்க: அபார வெற்றியுடன் நடப்பு ஐபிஎல் தொடரை நிறைவு செய்த சிஎஸ்கே!

கிளாசன், ஹெட் அதிரடி; வரலாற்றுச் சாதனை

முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். 92 ரன்களுக்கு சன்ரைசர்ஸ் அணி அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இதனையடுத்து, டிராவிஸ் ஹெட் மற்றும் ஹெய்ன்ரிச் கிளாசன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை தங்களது அசாத்திய பேட்டிங்கால் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்தது. அதிரடியில் மிரட்டிய இருவரும் சிக்ஸர் மழையைப் பொழிந்தனர். அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் சிக்ஸர் விளாசும் முயற்சியில் சுனில் நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 40 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், கிளாசனுடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார்.

இஷான் கிஷன் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்ட, கிளாசன் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இஷான் கிஷன் 20 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். களமிறங்கியது முதலே பந்துவீச்சாளர்களை திணறடித்த கிளாசன் சதம் விளாசி அசத்தினார். அவர் 39 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அனிகேத் வர்மா 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இதையும் படிக்க: தோனியிடம் எப்போதும் கேட்கப்படும் கேள்வி; பதிலால் ஆர்ப்பரித்த ரசிகர்கள்!

கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வைபவ் அரோரா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

ஐபிஎல் வரலாற்றில் குவிக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூருவுக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணி 287 ரன்கள் எடுத்திருந்ததே ஐபிஎல் வரலாற்றில் குவிக்கப்பட்ட ஒரு அணியால் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை எடுத்து வரலாறு படைத்தது. தற்போது, ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் சன்ரைசர்ஸ் அணியே எடுத்து சாதனை படைத்துள்ளது.

279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருவது குறிப்பிடத்தத்து.

கோலி - ஜிதேஷ் அதிரடி: 228 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்த ஆர்சிபி! குவாலிஃபையர் 1-க்கு தகுதி!

லக்னௌவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் ஆர்சிபி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று குவாலிஃபையர் 1 க்கு தகுதி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி மற்றும் 70-வது போட்டி உத்தரப் பிரதேசத்தின் ல... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் சதம்: ஆர்சிபிக்கு 228 ரன்கள் இலக்கு!

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணி 227 ரன்களை குவித்தது.லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இந்தப் போட்டியில் டாஸ்... மேலும் பார்க்க

லக்னௌவுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு; புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்குமா?

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் லக்னௌவில் இன்று (மே 27) நடைபெறும் கடைசி லீக் போட்டியில் லக்னௌ சூப்பர... மேலும் பார்க்க

ரசிகர்களின் கையெழுத்துப் பதிந்த சீருடை..! ஆர்சிபி ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ரசிகர்களின் கையெழுத்துப் பதிந்த சீருடையை ஆர்சிபி வீரர்கள் அணிவார்கள் என தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆர்சிபி அணி அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டுமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி அ... மேலும் பார்க்க

நாங்கள் இதுவரை எதையும் சாதிக்கவில்லை: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

நாங்கள் இதுவரை எதையும் சாதிக்கவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ... மேலும் பார்க்க

ஐபிஎல் இறுதிப்போட்டியில் பங்கேற்க முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ அழைப்பு!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் பங்கேற்க முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் ... மேலும் பார்க்க