செய்திகள் :

ஐபிஎல் இறுதிப்போட்டியில் பங்கேற்க முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ அழைப்பு!

post image

ஐபிஎல் இறுதிப்போட்டியில் பங்கேற்க முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. லக்னௌவில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதையும் படிக்க: பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்வி மும்பை அணிக்கான எச்சரிக்கை: ரிக்கல்டான்

முப்படை தளபதிகளுக்கு அழைப்பு

ஐபிஎல் இறுதிப்போட்டி வருகிற ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறவுள்ள நிலையில், இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ செயலர் தேவ்ஜித் சாய்கியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக இந்திய ஆயுதப் படைகளின் தளபதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு அகமதாபாதில் நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப்போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஆயுதப் படைகளின் வீரம், தைரியம் மற்றும் தன்னலமற்ற சேவைக்கு பிசிசிஐ சல்யூட் செய்கிறது.

ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஐபிஎல் நிறைவு விழாவில், நமது ஹீரோக்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். நாட்டில் கிரிக்கெட் அதீதமாக நேசிக்கப்பட்டாலும், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பைவிட வேறு எந்த ஒரு விஷயமும் பெரிதல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது. அதில், பல்வேறு பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.

இதையும் படிக்க: சச்சினின் 15 ஆண்டுகால சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!

பாகிஸ்தான் சார்பில் தாக்குதலை நிறுத்த வேண்டுகோள் வைக்கப்பட்டதையடுத்து, தாக்குதலை கைவிட இந்தியா ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

கோலி - ஜிதேஷ் அதிரடி: 228 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்த ஆர்சிபி! குவாலிஃபையர் 1-க்கு தகுதி!

லக்னௌவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் ஆர்சிபி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று குவாலிஃபையர் 1 க்கு தகுதி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி மற்றும் 70-வது போட்டி உத்தரப் பிரதேசத்தின் ல... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் சதம்: ஆர்சிபிக்கு 228 ரன்கள் இலக்கு!

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணி 227 ரன்களை குவித்தது.லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இந்தப் போட்டியில் டாஸ்... மேலும் பார்க்க

லக்னௌவுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு; புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்குமா?

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் லக்னௌவில் இன்று (மே 27) நடைபெறும் கடைசி லீக் போட்டியில் லக்னௌ சூப்பர... மேலும் பார்க்க

ரசிகர்களின் கையெழுத்துப் பதிந்த சீருடை..! ஆர்சிபி ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ரசிகர்களின் கையெழுத்துப் பதிந்த சீருடையை ஆர்சிபி வீரர்கள் அணிவார்கள் என தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆர்சிபி அணி அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டுமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி அ... மேலும் பார்க்க

நாங்கள் இதுவரை எதையும் சாதிக்கவில்லை: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

நாங்கள் இதுவரை எதையும் சாதிக்கவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ... மேலும் பார்க்க

ஷ்ரேயாஸைக் கிண்டல் செய்த ரோஹித் சர்மா..! வைரல் விடியோ!

ரோஹித் சர்மா செய்த குறும்புத்தனமான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.இந்தப் போ... மேலும் பார்க்க