செய்திகள் :

ஷ்ரேயாஸைக் கிண்டல் செய்த ரோஹித் சர்மா..! வைரல் விடியோ!

post image

ரோஹித் சர்மா செய்த குறும்புத்தனமான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

போட்டிக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரைப் போன்று முன்னாள் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா நடந்துசென்று அவரைக் கட்டிப்பிடிப்பார்.

இந்த விடியோவை மும்பை இந்தியன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ரோஹித் சர்மாவின் இந்தக் குறும்புத்தனமான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் முக்கியமான போட்டியில் தோல்வியடைந்த பிறகும் இப்படியான குறும்புத்தனங்களை செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் 5 கோப்பைகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

கோலி - ஜிதேஷ் அதிரடி: 228 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்த ஆர்சிபி! குவாலிஃபையர் 1-க்கு தகுதி!

லக்னௌவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் ஆர்சிபி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று குவாலிஃபையர் 1 க்கு தகுதி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி மற்றும் 70-வது போட்டி உத்தரப் பிரதேசத்தின் ல... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் சதம்: ஆர்சிபிக்கு 228 ரன்கள் இலக்கு!

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணி 227 ரன்களை குவித்தது.லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இந்தப் போட்டியில் டாஸ்... மேலும் பார்க்க

லக்னௌவுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு; புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்குமா?

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் லக்னௌவில் இன்று (மே 27) நடைபெறும் கடைசி லீக் போட்டியில் லக்னௌ சூப்பர... மேலும் பார்க்க

ரசிகர்களின் கையெழுத்துப் பதிந்த சீருடை..! ஆர்சிபி ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ரசிகர்களின் கையெழுத்துப் பதிந்த சீருடையை ஆர்சிபி வீரர்கள் அணிவார்கள் என தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆர்சிபி அணி அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டுமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி அ... மேலும் பார்க்க

நாங்கள் இதுவரை எதையும் சாதிக்கவில்லை: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

நாங்கள் இதுவரை எதையும் சாதிக்கவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ... மேலும் பார்க்க

ஐபிஎல் இறுதிப்போட்டியில் பங்கேற்க முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ அழைப்பு!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் பங்கேற்க முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் ... மேலும் பார்க்க