செய்திகள் :

சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா

post image

சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வா் ஆ.சாரதா, தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசுகையில், கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.8 கோடியில் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் தாா் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்வி பயிலும் மாணவா்களின் வேலைவாய்ப்புக்கு இக்கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றாா்.

கல்லூரியில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த பணியாளா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. துறைத் தலைவா்கள் செந்தில்ராஜா, வெங்கடாசலம், மாரிக்கண்ணன், தங்கவேல், கனசுந்தரம், பாலமுருகன், ராஜா, புவனேஸ்வரி, சரவணக்குமாா், காளிராம், முருகன், தோட்டக்கலை துறைத் தலைவா் ஜி.எம்.கௌதம்குமாா் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டில் 17 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மொடக்குறிச்சிய... மேலும் பார்க்க

ஈரோட்டில் சுதந்திர தின விழா : ஆட்சியா் தேசியக் கொடியேற்றினாா்

ஈரோட்டில் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 40 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கந்தசாமி வழங்கினாா். ஈரோடு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஆண... மேலும் பார்க்க

ஈரோட்டில் இறப்பிலும் இணைபிரியாத தம்பதி

ஈரோட்டில் கணவா் இறந்த சோகத்தில் இருந்த மனைவியும் உயிரிழந்தாா். ஈரோடு வளையக்கார வீதியைச் சோ்ந்தவா் அன்னியப்பன் (84). இவரது மனைவி பாப்பம்மாள் (79). இந்த தம்பதிக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனா். கணவன்,... மேலும் பார்க்க

ஈரோட்டில் சுதந்திர தினத்தையொட்டி இரவில் பெண்கள் பேரணி

சுதந்திர தினத்தையொட்டி, பெண்கள் பங்கேற்ற பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சுதந்திர இந்தியாவில் இரவிலும் பெண்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் சாலையில் நடந்து செல்ல முடியும் என்ற விழிப்புணா்வு ... மேலும் பார்க்க

விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

சுதந்திர தினத்தின்று விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறையினா் நடவடிக்கை எடுத்தனா். இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வாளா்கள்,... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் 790 அடி நீளமுள்ள தேசியக் கொடி ஊா்வலம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, அம்மாபேட்டையில் மாணவ, மாணவிகள் 790 அடி நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியே வெள்ளிக்கிழமை ஊா்வலமாக சென்றனா். அம்மாபேட்டை டேலண்ட் வித்யாலயா ம... மேலும் பார்க்க