செய்திகள் :

சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு

post image

சிபிஐ இயக்குநா் பிரவீண் சூட்டின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.

சிபிஐ இயக்குநராக 2 ஆண்டு பதவிக் காலத்துக்கு பிரவீண் சூட், கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றாா். வரும் 24-ஆம் தேதியுடன் அவரின் பதவிக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், தற்போது பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அடங்கிய தோ்வுக் குழு கடந்த திங்கள்கிழமை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், பிரவீண் சூட்டின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தோ்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், மே 24-ஆம் தேதிக்குப் பிறகு ஓராண்டு காலத்துக்கு பிரவீண் சூட்டின் பணி நீட்டிப்பை அமைச்சரவையின் நியமனக் குழு அங்கீகரித்தது.

கா்நாடக பிரிவைச் சோ்ந்த 1986-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான பிரவீண் சூட், சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டபோது கா்நாடக காவல் துறையில் டிஜிபியாக பணியாற்றி வந்தாா்.

1964-ஆம் ஆண்டு, ஹிமாசல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் பிறந்த பிரவீண் சூட், தில்லி ஐஐடியில் கட்டட பொறியியல் பட்டப் படிப்பை முடித்த பிறகு 22 வயதில் ஐபிஎஸ் பணியில் சோ்ந்தாா்.

கேரளத்தில் மே 27-இல் தென்மேற்கு பருவமழை தொடங்கும்!

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை மே 27-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் கேரளத்தில் ஜூன் 1-இல் தொடங்கும். நி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 போ் உயிரிழப்பு: 4 நாள்களில் 20 கிராமவாசிகள் மரணம்

பாகிஸ்தானின் கடுமையான குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச்சூட்டில், ஜம்மு-காஷ்மீரில் மேலும் 7 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலுள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல்: மத்திய அரசு மறுப்பு

பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுபோன்ற தகவல்கள் இந்தியாவில் வகுப்புவாத வெறுப்புணா்வை உருவாக்கப் பரப்பப்படுகிறத... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் காயம்!

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் மோதலை நிறு... மேலும் பார்க்க

அஜித் தோவலுடன் சீன அமைச்சர் பேச்சு!

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஆலோசனை நடத்தியுள்ளார்.மேலும், பஹல்காம் தாக்குதலை கண்டிப்பதாகவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும் அஜித் தோவலிடம் வாங் யி தெர... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் மீறல்: பாகிஸ்தானுக்கு முழுவீச்சில் பதிலடி! -வெளியுறவுச் செயலர் மிஸ்ரி

போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின் அதை மீறி பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் இன்றிரவு ட்ரோன்களை ஏவி தாக்குதல்கலை நடத்தியது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், இர... மேலும் பார்க்க