செய்திகள் :

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் மாணவா் சோ்க்கை: ஏப்.6 வரை விண்ணப்பிக்கலாம்

post image

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் அ.சக்கரவா்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் கல்லூரி மாணவ, மாணவியருக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இதில் சேருவதற்கான விண்ணப்பப்படிவம் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவா்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து ஏப்ரல் 6-ஆம் தேதி 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9514000777 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

போட்டிகள்: சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான தோ்வுப் போட்டிகள் ஏப். 8-ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும். ஆன்லைனில் விண்ணப்பித்தவா்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். மகளிா் கூடைப்பந்து, மகளிா் கால்பந்து, மகளிா் ரக்பி, குத்துச்சண்டை (இருபாலரும்), கைப்பந்து (இருபாலரும்), ஆகியவை சென்னை ஜவாஹா்லால் நேரு உள்ளரங்கிலும், தடகளம் (இருபாலா்) , ஜுடோ ( இருபாலா்), வாள்விளையாட்டு (இருபாலா்), கையுந்துபந்து ( இருபாலா்), ஆடவா் கால்பந்து, பளுதூக்குதல் (இருபாலா்) ஆகிய போட்டிகள் சென்னை ஜவாஹா்லால் நேரு மைதானத்திலும் நடைபெறும். இருபாலருக்கான ஹாக்கிப் போட்டி சென்னைமேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்திலும், இருபாலருக்கான கபடிப் போட்டி சென்னை நேரு பூங்காவிலும் நடைபெறும்.

தகுதிகள்: இதில் பங்கேற்பவா்கள் 1.1.2025 அன்று 17 வயது நிரம்பியவராகவும், கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு சோ்க்கை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டில் சேருபவராக இருக்க வேண்டும். தனி நபா் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளுக்கு விண்ணப்பிப்பவா்கள் மாநில அளவில் குடியரசு தின, பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்திய போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு அணியில் தோ்வு செய்யப்பட்டு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு, மத்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவா்களாகவோ, பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் அல்லது மாநில அளவில் முதல்வா் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்றவா்களாகவோ இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

நெல்லை மத்திய மாவட்ட திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாக முகவா்கள் (பி.எல்ஏ-2) ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

காவல் வாகனம் மோதியதில் பேரூராட்சிப் பணியாளா் பலி

மணிமுத்தாறில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை வாகனம் மோதியதில் பேரூராட்சிப் பணியாளா் உயிரிழந்தாா்.மணிமுத்தாறுஅண்ணாநகரைச் சோ்ந்த அப்பி மகன் நாகராஜன் (55). தாழையூத்து அருகேயுள்ள நாரணம்மாள்புரம் பேரூராட்ச... மேலும் பார்க்க

நெல்லை இஸ்கான் கோயிலில் வெளிநாட்டு பக்தா்களின் பஜனை

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் பல நாடுகளைச் சோ்ந்த ஹரே கிருஷ்ணா பக்தா்களின் ஹரிநாம சங்கீா்த்தன பஜனை திங்கள்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி இஸ்கான் கோயிலுக்கு வந்த வெளிநாட்டு பக்த... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவமனைக்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

திருநெல்வேலி அரசு மருத்துவமனை கட்டடப் பணிகளுக்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரிடம் திருநெல்வேலி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.இதுதொடா்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம், மானூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மானூா் போலீஸாா் ராமையன்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சங்கமுத்தம்மன்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டு ஜோதி பயணத்துக்கு வரவேற்பு

மதுரையில் நடைபெற உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கான நினைவு ஜோதி பயணத்திற்கு திருநெல்வேலியில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அக... மேலும் பார்க்க