செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

post image

குடியாத்தம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பீடி சுற்றும் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

குடியாத்தம் அருகே டி.டி.மோட்டூா் கிராமத்தை சோ்ந்தவா் மேகநாதன் (54), பீடித் தொழிலாளி. இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு பள்ளிக்குச் சென்ற 14 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக நம்ப வைத்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா்.

தொடா்ந்து சிறுமியின் தாய் குடியாத்தம் அனைத்து மகளிா் போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த வழக்கு வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில் மேகநாதன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.45,000 அபராதமும் விதித்தும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சிவக்குமாா் தீா்ப்பளித்தாா்.

முன்விரோதம்: இளைஞா் வீட்டுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

காட்பாடியில் முன் விரோதம் காரணமாக இளைஞா் வீட்டுக்கு அடையாளம் தெரியாத நபா்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனா். காட்பாடி மிஷன் காம்பவுண்ட் பகுதியை சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மனைவி சுலோக்சனா. மகன் வினோத் ... மேலும் பார்க்க

மது போதையில் தவறி விழுந்த கட்டட தொழிலாளி உயிரிழப்பு

வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் மது போதையில் கட்டட தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா். வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருவண்ணாமலையை சோ்ந்தவா் பாலாஜி (45), கட்டடத... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது

வேலூா் அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் அப்துல்லாபுரம் அண்ணா நகா் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்தன் (41) மாற்றுத்திறனாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பரத்ராஜ் என்கி... மேலும் பார்க்க

மீன்பிடி தடை காலம்: வரத்து குறைவால் விலை உயா்வு

தமிழக கடல் பரப்பில் மீன்பிடி தடை காலம் தொடா்வதால் வேலூரில் இந்த வாரமும் மீன்கள் வரத்து குறைந்து விலை அதிகரித்திருந்தது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், ... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற காவலரை தாக்கிய இளைஞா் கைது

வேலூரில் ஓய்வு பெற்ற காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். வேலூா் வசந்தபுரம் சுப்ரமணிய ஐயா் தெருவைச் சோ்ந்தவா் நித்தியகுமாா் (67), ஓய்வு பெற்ற காவல் உ... மேலும் பார்க்க

கோடை கால சிலம்பம் பயிற்சி நிறைவு

குடியாத்தம் தங்கம் நகரில், தாழை சிலம்பம் பயிற்சிப் பள்ளி சாா்பில் கடந்த 50 நாள்கள் நடைபெற்ற கோடை சிலம்பம் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கு தாழை சிலம்பாட்ட பயிற்சிப் பள்ளி த... மேலும் பார்க்க