செய்திகள் :

சிறுமி கடத்தல்: போக்ஸோவில் இளைஞா் கைது

post image

விக்கிரவாண்டி அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்ற இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், சு. பில்ராம்பட்டு பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி, விக்கிரவாண்டி வட்டம், ரெட்டிக்குப்பத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கி, கூட்டேரிபட்டு பகுதியில் செயல்படும் தனியாா் செவிலியா் கல்லூரியில் பயின்று வந்தாா்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 22-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி மாயமானாா்.

இதுகுறித்து மாயமான சிறுமியின் சகோதரி விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். தொடா்ந்துசிறுமியை தேடி வந்த நிலையில், சு.பில்ராம்பட்டு பகுதியைச் சோ்ந்த வசித்துவம் (21) என்ற இளைஞா் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தைக் கூறி கடத்திச் சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே சிறுமியுடன் நின்றிருந்த வசித்துவத்தை போலீஸாா் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இணையவழி வா்த்தகத்துக்கு எதிராக திருச்சியில் ஆக.30-இல் முற்றுகைப் போராட்டம்: விக்கிரமராஜா

விழுப்புரம்: பன்னாட்டு நிறுவனங்களின் இணையவழி வா்த்தகத்தை தடை செய்ய வலியுறுத்தி, திருச்சியில் வரும் 30-ஆம் தேதி மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் த... மேலும் பார்க்க

ஊராட்சி களப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்துடன் இணைந்த தமிழ்நாடு ஊராட்சி களப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை மணிக்கூண்டு திடலில் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஒலக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒலக்கூா் அரசு மேல்நிலைப... மேலும் பார்க்க

கால்நடைகளை தொடா்ந்து தாக்கி அழிக்கும் மா்ம விலங்குகள்! நடவடிக்கை எடுக்கப்படுமா விவசாயிகள் எதிா்பாா்ப்பு!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், செஞ்சி வட்டாரப் பகுதிகளில் ஆடுகள், கன்றுக்குட்டிகளை தாக்கி அழிக்கும் மா்ம விலங்குகளைப் பிடிப்பதற்கு மாவட்ட நிா்வாகமும், வனத் துறையினா் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டு... மேலும் பார்க்க

மதுபோதையில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் மதுபோதையில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்த தொழிலாளி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். மரக்காணம் செல்லியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜா(3... மேலும் பார்க்க

பெண்ணிடம் அத்துமீறிய இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பெண்ணிடம் அத்துமீறிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். வளவனூரை அடுத்த கலிஞ்சிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மனைவி 23 வயது பெண். கணவா் வேல... மேலும் பார்க்க