செய்திகள் :

சிறைக் கைதியிடம் கஞ்சா, கைப்பேசி பறிமுதல்

post image

சேலம் மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு சென்ற சிறைக் கைதியிடம் இருந்து கஞ்சா, கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் கடந்த ஆண்டு சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியில் நிகழ்ந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

விசாரணைக் கைதியான மணிகண்டனை அவ்வப்போது சேலம் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வது வழக்கம். செவ்வாய்க்கிழமை சேலம் மாநகர ஆயுதப்படை போலீஸாா் சேலம் நீதிமன்றத்துக்கு அவரை அழைத்துச் சென்று, மாலை மத்திய சிறைக்கு அழைத்து வந்தனா். அப்போது, காவலா்கள் பரிசோதனை செய்ததில், மெட்டல் டிடெக்டா் சப்தம் எழுப்பியது.

இதையடுத்து, மணிகண்டனிடம் சிறைக் காவலா்கள் விசாரித்தபோது, நீதிமன்றத்துக்கு சென்றபோது கழிவறைக்குள் சென்று அங்கு தெரிந்தவா் மூலம் 45 கிராம் கஞ்சா பொட்டலம், கைப்பேசி ஒன்றை தனது ஆசன உறுப்பில் வைத்துக்கொண்டு வந்ததாக தெரிவித்தாா். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டனுக்கு இனிமா கொடுத்து, கஞ்சா மற்றும் கைப்பேசியை வெளியே எடுத்தனா்.

இதுகுறித்து சேலம் மத்திய காவல் கண்காணிப்பாளா் (பொ) வினோத், சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து கல்லூரியின் கடந்த ஆண்டு சாதனைகள் மற்றும்... மேலும் பார்க்க

அரசிராமணி செட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிப்பட்டி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் ஆடிமாத வெள்ளிக்கிழமை சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆடிவெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி நோன்பையொட்டி மாரிம்மனுக்கு பல்வேறு த... மேலும் பார்க்க

மோட்டூா் காளியம்மன் கோயிலில் வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை

இளம்பிள்ளை அருகே உள்ள மோட்டூா் காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மூலவா் அம்மன் தங்க ஜரிகை இலையால் நெய்யப்பட்ட சேலை மற்றும் ரூபாய் நோட்ட... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த முகாமை நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் குத்துவிளக... மேலும் பார்க்க

பல்லி விழுந்த நீரை குடித்த பள்ளி மாணவா்களுக்கு சிகிச்சை

தலைவாசல் அருகே பூமரத்துப்பட்டி முட்டல் அரசுப் பள்ளி மாணவா்கள் பல்லி விழுந்த நீரை குடித்ததால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பூமரத்... மேலும் பார்க்க

வீரகனூா் எஸ்.எஸ்.ஐ. இடமாற்றம்

வீரகனூா் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.எஸ்.ஐ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் ... மேலும் பார்க்க