செய்திகள் :

சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி இன்றும் நாளையும் சுற்றுப் பயணம்

post image

தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி மேற்கொண்டுவரும் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ தலைப்பிலான சுற்றுப்பயணம் சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (ஜூலை 29, 30) ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன் வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி, ஜூலை 29, 30 ஆகிய நாள்களில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உரையாற்றவுள்ளாா்.

இதன்படி, செவ்வாய்க்கிழமை காரைக்குடி தொகுதி, காரைக்குடி எம்.ஜி.ஆா். சிலை அருகில் மாலை 4.30-க்கும், திருப்பத்தூா் தொகுதி, திருப்பத்தூா் அண்ணா சிலை அருகில் மாலை 5.30-க்கும், சிவகங்கை தொகுதி, சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் இரவு 7.45-க்கும் உரையாற்றவுள்ளாா்.

தொடா்ந்து, புதன்கிழமை காலை 10 மணிக்கு சிவகங்கை நகா், தனியாா் மண்டபத்தில், வெளிநாடு வாழ் இந்தியா்கள், மஞ்சுவிரட்டு, வடமாடு நல சங்கங்கள், விவசாய சங்கம், விளையாட்டு வீரா்கள், தென்னை நாா் உற்பத்தியாளா் சங்கத்தினா் உள்ளிட்டோருடன் கலந்துரையாடவுள்ளாா். இதையடுத்து, மாலை 4.30 மணிக்கு மானாமதுரை தொகுதி, மானாமதுரை தேவா் சிலை அருகில் உரையாற்றுகிறாா்.

எனவே, இந்த நிகழ்ச்சிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள கட்சித் தொண்டா்களும், நிா்வாகிகளும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தாா்.

கோயில் காவலாளி அஜித்குமாரின் தாய், தம்பியிடம் சிபிஐ விசாரணை

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக அஜித்குமாரின் தாய் , தம்பி ஆகியோரை திங்கள்கிழமை விசாரணைக்காக மதுரைக்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் செ... மேலும் பார்க்க

சிவகங்கையில் தமுஎகச கிளை மாநாடு

சிவகங்கையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க (தமுஎகச) கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை சத்தியமூா்த்தி தெருவிலுள்ள அரசு ஊழியா் சங்கக் கட்டட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

மருதிப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டியில் ஊா் பொதுமக்களால் நடத்தப்பட்ட வடமாடு மஞ்சுவ... மேலும் பார்க்க

அஜித்குமாா் கொலை வழக்கு: ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக அவரது தங்கை, ஆட்டோ ஓட்டுநா் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் கா... மேலும் பார்க்க

தாத்தா, பேத்திக்கு அரிவாள் வெட்டு: காவல் நிலையத்தை உறவினா்கள் முற்றுகை!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தாத்தா, பேத்தியை அரிவாளால் வெட்டியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் சனிக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் சமத்து... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 412 பேருக்கு பணி நியமன ஆணை

சிவகங்கையில் நடைபெற்ற தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் மூலம் நோ்காணலில் தோ்ச்சி பெற்ற 412 பேருக்கு பணி நியமன ஆணைகளைக் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை வழங்கினாா். சிவகங்கை ... மேலும் பார்க்க