செய்திகள் :

சிவகார்த்திகேயனிடன் மன்னிப்புக் கேட்ட அமீர் கான்! ஏன்?

post image

நடிகர் அமீர் கான் சித்தாரே சமீன் பர் படத்திற்காக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

நடிகர் அமீர் கான் நடிப்பில் வெளியான சித்தாரே சமீன் பர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூல் ரீதியாகவும் கலக்கி வருகிறது.

அறிவுசார் சவால்கள் கொண்ட இளைஞர்களுக்கான கூடைப்பந்து பயிற்சியாளராக இருக்கும் அமீர் கான், அவர்களால் எப்படியெல்லாம் சோதிக்கப்படுகிறார் என்கிற கதையில், மூளை வளர்ச்சி குறைபாடு கொண்டவர்களைச் சமூகம் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதை அழகாக சித்தாரே திரைப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது.

இப்படம் ஸ்பானிய மொழியில் வெளியான சாம்பியன் என்கிற படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய நடிகர் அமீர் கான், “சித்தாரே சமீன் பர் திரைப்படத்தின் கதையை இயக்குநர் ஆர். எஸ். பிரசன்னா சொன்னபோது நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், லால் சிங் சத்தா தோல்வியால் மிகுந்த மனவேதனையில் இருந்ததால் சித்தாரே படத்திலிருந்து விலகினேன். பின், தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இப்படத்தை எடுக்கத் திட்டமிட்டோம். அதுகுறித்து அவரிடமும் பேசினோம்.

ஆனால், நானும் பிரசன்னாவும் படத்தின் எழுத்துப் பணிகளை மேற்கொண்டபோது இப்படத்தில் நானே நடிக்கிறேன் என்கிற விருப்பத்தைத் தெரிவித்தேன். பிரசன்னாவும் ஒகே என்றார். பின், சித்தாரேவில் நாயகனாக நடித்தேன். இதற்காக, நடிகர் சிவகார்த்திகேயனை அழைத்து நான் மன்னிப்புக் கேட்டேன். அது அவருக்கு ஏமாற்றமாக இருந்தாலும் என் சூழ்நிலையைப் புரிந்துகொண்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 3 பிஎச்கே டப்பிங்கிலேயே அழுதுவிட்டேன்: சரத் குமார்

aamir khan apologies to sivakarthikeyan for sitaare zameen par movie

இமாலய இலக்கை நோக்கி ஜிம்பாப்வே!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், ஜிம்பாப்வேக்கு வெற்றி இலக்கு 537 ரன்களாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 3-ஆம் நாளான திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் சோ்த்துள்ள அ... மேலும் பார்க்க

சபலென்கா முன்னேற்றம்; மெத்வதெவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான அரினா சபலென்கா வெற்றி பெற, முன்னணி வீரா் டேனியல் மெத்வதெ... மேலும் பார்க்க

காலிறுதியில் மோதும் பிஎஸ்ஜி - பயா்ன் மியுனிக்

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) - பயா்ன் மியுனிக் அணிகள் மோதுகின்றன.முன்னதாக ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டத்தில், பிஎஸ்ஜி 4-0 கோல் கணக்கில் ... மேலும் பார்க்க

தொடா் தோல்வி: இந்திய மகளிரணிக்கு பின்னடைவு

எஃப்ஐஹெச் புரோ லீக் மகளிா் ஹாக்கி போட்டியில் இந்தியா 2-3 கோல் கணக்கில் சீனாவிடம் தோல்வி கண்டது.இத்துடன், தொடா்ந்து 8-ஆவது தோல்வியை சந்தித்த இந்திய மகளிா் அணி, பிரதான போட்டியான புரோ லீக்கிலிருந்து, எஃப... மேலும் பார்க்க

யுஎஸ் ஓபன் பாட்மின்டன்: ஆயஷ் ஷெட்டி சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்ற யுஎஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் இளம் வீரா் ஆயுஷ் ஷெட்டி (20) திங்கள்கிழமை சாம்பியன் பட்டம் வென்றாா்.ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் அவா் 21-18, 21-13 என்ற நோ் கேம்... மேலும் பார்க்க

தேசிய மகளிா் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் நிகாத், லவ்லினா

தெலங்கானாவில் நடைபெறும் எலைட் மகளிா் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், உலக சாம்பியன்களான நிகாத் ஜரீன், லவ்லினா போா்கோஹெய்ன், நீது கங்காஸ் ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.51 கிலோ எடைப் பிரிவ... மேலும் பார்க்க