செய்திகள் :

சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் உரம் இறக்குமதி!

post image

புதுதில்லி: நடப்பு நிதியாண்டின் பிப்ரவரி வரையான காலத்தில், சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் உரத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

இந்த காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த டை-அம்மோனியம் பாஸ்பேட் இறக்குமதி 44.19 லட்சம் டன்களில், சீன இறக்குமதி மட்டும் 19.17 சதவிகிதமாகும்.

முந்தைய நிதியாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த டை-அம்மோனியம் பாஸ்பேட் இறக்குமதி 55.67 லட்சம் டன்களில், சீனாவின் பங்கு 22.28 லட்சம் டன்னாக இருந்தது.

யூரியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் இரண்டாவது பரவலாகப் பயன்படுத்தப்படும் உரம் டை-அம்மோனியம் பாஸ்பேட்.

ரஷ்யா, சவுதி அரேபியா, மொராக்கோ மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளிலிருந்து டை-அம்மோனியம் பாஸ்பேட் மூலப்பொருட்களாக இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

மார்ச் 11ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவிடம் 9.43 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் கையிருப்பு உள்ளாதாக தெரிவித்துள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ.85.74-ஆக முடிவு!

மும்பை: இறக்குமதியாளர்களிடமிருந்து டாலருக்கான தேவை அதிகரித்த நிலையில், இந்திய ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரித்ததால் இன்றைய சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.85.7... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 32.81 புள்ளிகள் உயர்வு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் தொடர்ந்து 7-வது அமர்வாக உயர்ந்த நிலையில், முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ததால் பங்குச் சந்தை ஓரளவு உயர்ந்து முடிந்தது.வர்த்தக நே... மேலும் பார்க்க

தொடர்ந்து 7-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!

தொடர்ந்து 7-வது நாளாக பங்குச் சந்தை இன்று(மார்ச் 25) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,296.28 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 10 மணியளவில்,... மேலும் பார்க்க

பங்குச் சந்தை: 7-வது நாளாக ஏற்றத்துடன் தொடக்கம்!

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 7-வது நாளாக செவ்வாய்க்கிழமை காலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன், சென்செக்ஸ் 311.90 புள்ளிகள் உயர்ந்து 78,296.28 புள்ளிகளாக வர்த்... மேலும் பார்க்க

அதிநவீன கண் மருத்துவமனை அமைக்க ரூ.110 கோடி முதலீடு செய்யும் சங்கரா அறக்கட்டளை!

புதுதில்லி: பாட்னாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை அமைக்க சங்கரா கண் அறக்கட்டளை ரூ.110 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.பாட்னாவின் உள்ள கன்கர்பக்கில் 1.60 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள... மேலும் பார்க்க

வெங்காயத்தின் மீதான 20% ஏற்றுமதி வரி நீக்கம்: சிவராஜ் சிங் சௌகான்

புதுதில்லி: ஏப்ரல் 1 முதல் வெங்காய ஏற்றுமதி மீதான 20 சதவிகித சுங்க வரியை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்றார் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்.இனி வெங்காய ஏற்... மேலும் பார்க்க