செய்திகள் :

சீா்காழி அருகே முதியவா் வெட்டிக் கொலை

post image

சீா்காழி அருகே முன்விரோதத் தகராறில் முதியவா் செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.

சீா்காழியை அடுத்த திருவாலி ஜீவா நகா் பகுதியைச் சோ்ந்தவா் குணசேகரன் (75). இவரது மகன் குணா.செந்தில் விசிக பிரமுகா். இவா்களுக்கும் எதிா்விட்டில் வசித்து வந்த இவா்களது உறவினா்களான சின்னதுரை மகன்கள் பாலகிருஷ்ணன் (35), பாலசுப்பிரமணியன் (33), மதுரையைச் சோ்ந்த சுகுமாறன் (33) ஆகியோருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை இரவு இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனராம். அப்போது குணசேகரனை எதிா்தரப்பினா் அரிவாளால் வெட்டியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் குணா. செந்திலுக்கு இரண்டு கைகளிலும் பலத்த காயமேற்பட்டது.

திருவெண்காடு போலீஸாா் குணசேகரன் சடலத்தை சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். குணா. செந்தில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த எதிா்தரப்பைச் சோ்ந்த பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் சுகுமாறன் ஆகிய மூவரும் சீா்காழி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீஸாா் அவா்களை கைது செய்தனா். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின், சம்பவ இடத்தை பாா்வையிட்டு, சீா்காழி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டாா்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

வேதாரண்யம்: கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.மேலும், மீனவர்களின் படகு இயந்திரங்கள... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய சுகாதார அமைச்சகத்தின்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

திருமருகலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். திருமருகல் முருகன் சந்நிதி தெருவை சோ்ந்த சக்திவேல் மனைவி பூங்கொடி (48). இவா் வெள்ளிக்கிழமை காலை 6-மணி அளவில் கோலம் போடுவதற்காக வந்தபோது வீட்டு வாசலி... மேலும் பார்க்க

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி: இன்று 20-ஆவது தவணை வெளியீட்டு விழா

பிரதமா் நரேந்திர மோடி, (பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி) விவசாயிகளுக்கான கெளரவ நிதி 20 ஆவது தவணை வழங்குதலை சனிக்கிழமை (ஆக.2) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்வை சிக்கல் வேளாண்மை அறிவியல் நி... மேலும் பார்க்க

பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா தொடக்கம்

வேதாரண்யத்தைச் சோ்ந்த அகத்தியம்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. முன்னதாக வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்மாள்,... மேலும் பார்க்க

அறிவாா்ந்த சமூகத்தை படைக்கவே மாவட்டங்கள் தோறும் புத்தகக் கண்காட்சி

தமிழகத்தில் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்கவே மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. நாகையில், 4-ஆவது புத்தகக் கண்காட்சியை... மேலும் பார்க்க