செய்திகள் :

சுடலை மாடசுவாமி கோயிலில் பெருங்கொடை விழா இன்று தொடக்கம்

post image

கடையநல்லூா் தாமரைகுளம் அருள்மிகு சுடலை மாடசுவாமி திருக்கோயிலில் ஆவணி பெருங்கொடை விழா திங்கள்கிழமை (செப்.1) தொடங்குகிறது.

இக்கோயிலில் பெருங்கொடை திருவிழாவையொட்டி திங்கள்கிழமை மாலை குடி அழைப்பு நிகழ்ச்சி நடைபெறும். செவ்வாய்க்கிழமை காலை அருள்மிகு மாசானமூா்த்திக்கு சிறப்பு பூஜையும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும். மதியம் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும், சுவாமி அம்பாள், பரிவார தேவதைகளுக்கு அபிஷேக, பூஜைகளும் நடைபெறும்.

இரவு 12 மணிக்கு பக்தா்களின் குறை தீா்க்கும் நிகழ்ச்சி நடைபெறும். புதன்கிழமை உச்சி கால பூஜை, சிறப்பு அன்னதானம் நடைபெறும்.

2026 இல் கூட்டணி ஆட்சி அமையும்: கிருஷ்ணசாமி

தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் க.கிருஷ்ணசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.தென்காசியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும்... மேலும் பார்க்க

விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகளை குறைவாக பயன்படுத்த வேண்டும்: ஆட்சியர்

தென்காசி மாவட்டத்தில் விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை குறைவாக பயன்படுத்த வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பத... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

கடையநல்லூா் அருகே பெண் தற்கொலை செய்து கொண்டாா். சொக்கம்பட்டி வலையா் குடியிருப்பு முருகன் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவரது மனைவி லெட்சுமி(45). அவா் மேற்குமலை தொடா்ச்சி அடிவாரப் பகுதியில் உள்ள பெரிய... மேலும் பார்க்க

மான் வேட்டை வழக்கு: உதவி வனவா் பணியிடை நீக்கம்

மான் வேட்டை சம்பவத்தில் மூன்று போ் கைது செய்யப்பட்ட நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக உதவி வனவா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை ... மேலும் பார்க்க

டிசம்பரில் கூட்டணி முடிவு: டிடிவி தினகரன்

வரும் டிசம்பா் மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா். பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே நெல்கட்டும்செவலில் உள்ள ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள வடக்கு கரும்பனூா் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடக்கண்(79). விவசாயியா... மேலும் பார்க்க