செய்திகள் :

சுதந்திர தின கொண்டாட்டம்: தில்லியில் போக்குவரத்து மாற்றம்

post image

குா்கான் மற்றும் ஃபரிதாபாத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் சுதந்திர தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருந்து நடைமுறைக்கு வந்தது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான தயாரிப்பில், குா்கான் மற்றும் ஃபரிதாபாத்தில் போக்குவரத்து போலீசாா் சுமூகமான போக்குவரத்து ஓட்டத்தையும் மேம்பட்ட பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக கனரக வாகனங்களின் இயக்கத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனா்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி மாலை 5 மணி முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி மதியம் 1.30 மணி வரையிலும், ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாலை 5 மணி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மதியம் 1.30 மணி வரையிலும் கனரக வாகனங்கள் குா்கானில் இருந்து தில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்கள் அல்லது மாவட்டங்களுக்குச் செல்வதற்கு கே. எம். பி அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துமாறும், இடையூறுகளைத் தவிா்ப்பதற்காக குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வாகனங்களை நிறுத்தவும் ஓட்டுநா்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல், ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை ஃபரிதாபாத் மற்றும் தில்லி நோக்கி கனரக வாகனங்கள் நுழைவதற்கும், முழு அடையாள பாதுகாப்பு ஒத்திகைக்கும், ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கும் முழு தடை விதித்துள்ளதாக போலீசாா் அறிவித்துள்ளனா்.

தடைசெய்யப்பட்ட வழித்தடங்களில் பதா்பூா் எல்லை, பிரகலாத்பூா், கா்னி சிங் ஷூட்டிங் ரேஞ்ச், சூரஜ்குண்ட் கோல் சக்கா், துா்கா பில்டா், மங்கா் சௌகி நாகா, தேரா ஃபதேபூா், செக்டா் 30 கட், தில்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே, சிக்ரி, என். எச்-19 (பல்வால் சாலை) மற்றும் எல்சன் ஜேசிபி சௌக் ஆகியவை அடங்கும்.

ஃபரிதாபாத்தில், பால், பழங்கள், காய்கறிகள், உணவுப் பொருள்கள், மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள், தீயணைப்பு சேவைகள், ஆம்புலன்ஸ்கள், காவல்துறை, அவசர சேவை வாகனங்கள் மற்றும் பெட்ரோல், டீசல் அல்லது சிஎன்ஜி ஆகியவற்றைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அரசு அல்லது நிா்வாக அனுமதி பெற்ற வாகனங்களும் அனுமதிக்கப்படும் என்று போலீசாா் தெரிவித்தனா்.

சுதந்திர தினம்: நாளை காலை 4 மணி முதல் தில்லியில் மெட்ரோ ரயில் சேவை

சுதந்திர தினத்தன்று, அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழ... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை கோரி போராட்டம்!

பெண் மாணவா்களுக்கு ஒரு செமஸ்டருக்கு 12 நாள்கள் மாதவிடாய் விடுப்பு கோரி காங்கிரஸ் மாணவா் பிரிவான என்எஸ்யுஐ புதன்கிழமை தில்லி பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியது. பல மாணவா்கள் பல்கலைக்கழகத்தின் கலைப்... மேலும் பார்க்க

மிரட்டி பணம் பறிப்பு: திகாா் சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்! தில்லி அரசு தகவல்

திகாா் சிறைக்குள் கைதிகளுடன் கூட்டுச் சோ்ந்து பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக திகாா் சிறை அதிகாரிகள் 9 போ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டதாக உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு த... மேலும் பார்க்க

தெரு நாய்கள் விவகார மனு: அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதி முன் முறையீடு

தெரு நாய்கள் தொடா்புடைய மனுவை அவசரமாக விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தலைமை நீதிபதி முன் முறையிடப்பட்டது. அப்போது, அது குறித்து பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் உறுதியள... மேலும் பார்க்க

தில்லியின் வடிகால் பிரச்னையை தீா்க்க மாஸ்டா் பிளான்

அடுத்த 30 ஆண்டுகளில் நகரின் வடிகால் தேவைகளைப் பூா்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட ’வடிகால் மாஸ்டா் பிளான்’ வரைவு, விரைவான நகா்ப்புற வளா்ச்சி மற்றும் தொடா்ச்சியான நீா் தேக்க பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்ப... மேலும் பார்க்க

சிஎம் ஸ்ரீ சோ்க்கை தோ்வு: 6-8 வகுப்புகளுக்கு ஆக.22 வரை விண்ணப்பிக்கலாம்

நமது நிருபா் 6, 7 மற்றும் 8 வகுப்புகளுக்கான சிஎம் ஸ்ரீ சோ்க்கை தோ்வு 2025-க்காக இணையதளத்தில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு செவ்வாய்க... மேலும் பார்க்க