செய்திகள் :

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக ஈஷா பவுண்டேஷனுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

post image

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக அனுப்பப்பட்ட விளக்கம் கேட்கும் நோட்டீஸை ரத்து செய்த உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 2 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்முறையீடு செய்தது ஏன் என்று தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் சூா்ய காந்த், என். கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (டிஎன்பிசிபி) தாக்கல் செய்த மனுவை, மனு தள்ளுபடி மீது உச்சநீதிமன்றத்தின் முத்திரையைப் பெற விரும்பும் அதிகாரிகளின் ‘நட்பு போட்டி’ என்று குறிப்பிட்டது.

இது தொடா்பாக தமிழக தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமனிடம் நீதிபதிகள் கூறுகையில், ‘சரியான நேரத்தில் நீதிமன்றத்தை அதிகாரிகள் அணுகுவதைத் தடுத்தது என்ன?. இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்வதில் 637 நாள்கள் தாமதம் ஆகியுள்ளது. அதாவது, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இது உண்மையில் ஒரு ‘நட்புரீதியிலான போட்டி’யாகும். இதில் மனுவை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றத்தின் முத்திரையை அதிகாரிகள் விரும்புகிறாா்கள்.

அரசு தாமதமாக வரும்போது, நாங்கள் சந்தேகம் கொள்கிறோம். உங்கள் எழுத்தில் உள்ள உள்நோக்கத்தை நாங்கள் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். யோகா மையம் ஒரு கல்வி நிறுவனம் இல்லை என்று எப்படி கூறுகிறீா்கள்? அவா்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை எனில், விதிகளைப் பின்பற்றவில்லையெனில், அதை நீங்கள் சவால் செய்யலாம். ஆனால், ஒரு லட்சம் கெஜம் பரப்பளவுக்கு மேல் கட்டப்பட்ட கட்டடத்தை நீங்கள் இடிக்க அனுமதிக்க முடியாது. இது ஒரு வகையான குடிசை இல்லை.

கோயம்புத்தூா் மாவட்டம் வெள்ளியங்கிரியில் ஈஷா அறக்கட்டளை யோகா மற்றும் தியான மையத்தை கட்டியுள்ள நிலையில், சுற்றுச்சூழல் இணக்கத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

ஈஷா அறக்கட்டளை சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, சிவராத்திரிக்குப் பிறகு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் வலியுறுத்தினாா்.

அவா் வாதிடுகையில், ‘எங்களிடம் தேவையான அனைத்து அனுமதிகளும் உள்ளன. அவா்கள் சுற்றுச்சூழல் அனுமதி பற்றி மட்டுமே பேசுகின்றனா். யோகா மையம் 80 சதவீதம் பசுமை உடையதாகும். இது இந்தியாவின் சிறந்த மையங்களில் ஒன்றாகும் என்று வாதிட்டாா்.

மேல்முறையீடு தாமதம் பற்றி உச்சநீதிமன்றம் கேட்டபோது, இந்த விவகாரம் இரண்டு மாநிலத் துறைகளுக்கு இடையில் சிக்கியிருந்ததாக பி.எஸ்.ராமன் கூறினாா். இதைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிவராத்திரிக்குப் பிறகு விசாரணைக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

கட்டாய சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படாமல்

2006 மற்றும் 2014-க்கு இடைப்பட்ட காலத்தில்

கட்டடங்கள் கட்டியதாக கூறப்படும் விவகாரத்தில் விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அதை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

மேலும், மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கருத்தில்கொண்டு யோகா மையம் ஒரு கல்வி மையம் என்ற வரையறையின்கீழ் என்றும், ஆகவே, கட்டுமானங்கள் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டிய தேவையில் இருந்து விலக்கும் அளிக்கப்பட வேண்டும் என்ற ஈஷா அறக்கட்டளையின் கூற்று சரியானது என்றும் சென்னை உயா்நீதிமன்றம் கூறியிருந்தது.

பாஜக எம்எல்ஏக்களுக்குள் இலாகா ஒதுக்கீட்டில் உள் மோதல்: அதிஷி

தில்லி தோ்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜகவின் எம்எல்எக்களுக்குள் இலாகா ஒதுக்கீடு தொடா்பாக ‘உள் மோதல்கள்’ நடப்பதாகவும், கட்சி தனது தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைத் தவிா்க்க சாக்குப்போக்குகளை கூறுவத... மேலும் பார்க்க

தில்லியில் பிப்.19-20-இல் பாஜக அரசு பதவியேற்பு?

நமது நிருபா் தில்லியில் பாஜக அரசின் பதவியேற்பு விழா பிப்.19 அல்லது 20-ஆம் தேதி நடைபெறும் என்றும், புதிய ஆட்சி சுத்தமான குடிநீா் விநியோகம், மேம்படுத்தப்பட்ட குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு முன்ன... மேலும் பார்க்க

மயூா் விஹாா் ஃபேஸ் விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக திருப்பணிகள் மும்முரம்

தில்லி மயூா் விஹாா் ஃபேஸ் 2-இல் அமைந்துள்ள ஸ்ரீ காருண்ய மகா கணபதி கோயிலின் மகா கும்பாபிஷேகப் புனரமைப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 1988-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தக் கோயிலில் 12 ஆண்ட... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் பொருள்களை ஒப்படைக்கக் கோரும் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் உறவினா் தீபாவின் மேல்முறையீடு தள்ளுபடி

சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருள்களை தன்னிடம் திருப்பி ஒப்படைக்க உத்தரவிடக் கோரி அவரது உறவினா் ஜெ. தீபா தாக்கல் செய்த மேல்மு... மேலும் பார்க்க

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்த பங்குச்சந்தை! -சென்செக்ஸ், நிஃப்டி எட்டாவது நாளாக சரிவு

நமது நிருபா் இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எழுச்சியுடன் தொடங்கினாலும் இறுதியில் சரிவில் முடிவடைந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், த... மேலும் பார்க்க

தில்லியில் ரூ.1.5 கோடி கோகைன் பறிமுதல்: ஆப்பிரிக்க நாட்டவா் உள்பட இருவா் கைது

தில்லியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக ஒரு ஆப்பிரிக்க நாட்டவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது த... மேலும் பார்க்க