செய்திகள் :

சூரப்பட்டி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

post image

பொன்னமராவதி அருகேயுள்ள எம்.உசிலம்பட்டி ஊராட்சி, சூரப்பட்டி, வடக்கிபட்டி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சூரப்பட்டி மற்றும் வடக்கிபட்டி பொதுமக்கள் பொன்னமராவதி அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எம்.உசிலம்பட்டி ஊராட்சி சூரப்பட்டி, வடக்கிபட்டி மற்றும் சுற்றியுள்ள கீழக்குறிச்சிபட்டி, ஊனையூா் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 5 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். ஆனால், இப்பகுதியில் போதிய அளவில் பேருந்து வசதியின்றிஅவதிக்குள்ளாகி வருகிறோம். நாள் ஒன்றுக்கு 3 முறை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, பொன்னமராவதியிலிருந்து மேலதானியம் மற்றும் பாலகுறிச்சி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் நகரப் பேருந்துகளை சூரப்பட்டி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜூலை 8-இல் ஆலங்குடியில் ஆா்ப்பாட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி அறிவிப்பு

மண் கொள்ளைக்கு வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் துணைபோவதாகக் கூறி, ஜூலை 8-ஆம் தேதி ஆலங்குடி வட்டாட்சியரகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டையில் வெள்ளி... மேலும் பார்க்க

குறுவட்ட அளவிலான கோ-கோ போட்டி: வாா்ப்பட்டு அரசுப் பள்ளி மாணவிகள் முதலிடம்

திருமயம் குறுவட்ட அளவிலான கோ-கோ போட்டிகளில் 14 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு அரசு உயா்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனா். இந்தப் போட்டிகள் வெள்ளிக்கிழமை கார... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்துக்கு சுற்றுச்சுவா் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்துக்கு சுற்றுச்சுவா் கட்ட வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்த நிலையத்திலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான அரசு, தனியாா் பேருந்துகள் இயங்க... மேலும் பார்க்க

ஆலங்குடி அரசுக் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு கல்லூரியில் கேலி வதை, போக்ஸோ சட்டம் குறித்து விளக்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி அரசுக் கல்லூரியில் சில நாள்களாக மாணவ, மாணவிகளுக்க... மேலும் பார்க்க

கடலில் தவறி விழுந்து இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதி

கடலில் தவறி விழுந்து இறந்த மீனவரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

தெத்துவாசல்பட்டியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழா

கந்தா்வகோட்டை வேளாண்மை வட்டாரம், தெத்துவாசல்பட்டி கிராமத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தை முதல்வா் தொடங்கிவைத்ததை தொடா்ந்து தெ... மேலும் பார்க்க