செய்திகள் :

செக் குடியரசின் முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு! சைபர் தாக்குதலின் சதியா?

post image

செக் குடியரசு நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டின் பொது போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

செக் குடியரசின் தலைநகர் பிராக் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (ஜூலை 4) மதியம் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், அந்நாட்டின் ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிராக் நகரத்தின் சுரங்கப் பாதை ரயில்கள் முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில் சில மணி நேரங்களில் அங்கு மின்சாரம் மீண்டும் சீரானதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களின் சில பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதகாவும், அதை சரிசெய்யும் வேலைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும், அந்நாட்டு பிரதமர் பீட்டர் ஃபியாலா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

செக் குடியரசின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள மின்சாரக் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டதே இந்த மின் தடைக்குக் காரணமாக இருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவமானது, சைபர் குற்றவாளிகளின் செயலாக இருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், இதன் பின்னணியில் சைபர் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான சதி இல்லை என அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இத்துடன், அந்நாட்டின் 8 துணை மின்நிலையங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 5 மின்நிலையங்களில் மின்சார விநியோகம் சீரானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் டிராம், ரயில் உள்ளிட்டவை நடுவழியில் நின்றதால், மக்கள் மிகவும் அவதிக்குள்ளாதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த மின்தடையால், பராக்கிலுள்ள வாக்லவ் ஹாவெல் விமான நிலையம் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Public transport in the Czech Republic has been severely affected by power outages in major cities, including the capital.

இதையும் படிக்க:காஸாவில் வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச்சூடு: 35 பேர் பலி

காஸா போா் நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸ் தீவிர ஆலோசனை

இஸ்ரேலுடனான காஸா போா் நிறுத்தம் தொடா்பாக முன்வைக்கப்பட்டுள்ள வரைவு திட்டம் குறித்து பிற பாலஸ்தீன அமைப்புகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. காஸாவில் போா் நிறுத்தம் ஏற்படுவத... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற 30 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை கூறியது. எல்லை மாகாணமான கைபா் பக்துன்கவாவின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தி... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷிய ட்ரோன் தாக்குதல் புதிய உச்சம்

உக்ரைனின் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா இதுவரை இல்லாத மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒருவா் உயிரிழந்ததுடன், 26 போ் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா். இத... மேலும் பார்க்க

அமெரிக்க வரிச் சலுகை, குடியேற்ற மசோதா நிறைவேற்றம்: ஆதரவு 218; எதிா்ப்பு 214

அமெரிக்காவின் வரிச் சலுகை மற்றும் குடியேற்ற மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற கீழவை ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் மசோதா நிறைவேறியதைத் தொடா்ந்து, இரு அவைகளிலும் மசோதா நிறைவே... மேலும் பார்க்க

ரஷியா தலிபான் அரசுக்கு அங்கீகாரம்

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு அங்கீகாரம் அளித்துள்ள முதல் நாடாக ரஷியா ஆகியுள்ளது. தலிபான் ஆட்சியாளா்களால் நியமிக்கப்பட்ட புதிய தூதரை ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த அங்கீகாரத்தை ரஷிய அரசு வழங்கியுள்ளது.... மேலும் பார்க்க

ஈரானில் மீண்டும் சா்வதேச விமானப் போக்குவரத்து

அமெரிக்கா, இஸ்ரேல் உடனான பதற்றம் காரணமாக ஈரானில் 20 நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சா்வதேச விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. டெஹ்ரானில் உள்ள இமாம் கோமேனி சா்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்... மேலும் பார்க்க